தருவைகுளம் அருகே 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கடல்சார் புதை படிமங்கள் கண்டுபிடிப்பு

கீழக்கரை - திருச்செந்தூர் வரை பண்டைய கடல்சார் பாரம்பரிய மண்டலமாக அறிவிக்கப்படுமா?
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே  பனையூரில் கண்டெடுக்கப்பட்ட கடல்சார் புதை படிமங்கள்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே பனையூரில் கண்டெடுக்கப்பட்ட கடல்சார் புதை படிமங்கள்.

Updated on
2 min read

கோவில்பட்டி: தூத்​துக்​குடி மாவட்​டம் தருவைகுளம் அருகே கண்​டெடுக்​கப்​பட்ட கடல்​சார் புதை படிமங்​கள் 10 ஆயிரம் ஆண்​டு​களுக்கு முற்​பட்​டவை என இந்​திய விலங்​கியல் ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

மேலும் கீழக்​கரை முதல் திருச்​செந்​தூர் வரையி​லான கடற்​கரை மண்​டலத்தை ‘பண்​டைய கடல்​சார் பாரம்​பரிய மண்​டல​மாக’ அறிவிக்க வேண்​டும் என கோரிக்கை எழுந்​துள்​ளது.

தரு​வை​குளம் அருகே பட்​டினமருதூர், பனையூர் பகு​தி​களில் பழமை வாய்ந்த செவ்வக வடிவி​லான கிணறு,முது​மக்​கள் தாழி, பழமை​யான ஓடு​கள், இரும்​பு​கள், பழங்​கால நாண​யங்​கள் கண்​டெடுக்​கப்​பட்​டன.

இப்பகுதிகளில் நீர் மற்​றும் நிலப்​பரப்​புக்கு கீழ் புதையல் மற்​றும் கடல்​வாழ் உயி​ரினங்​களின் படிமங்​கள் இருப்​ப​தால் இந்​திய விலங்​கியல் மற்​றும் புவி​யியல் துறை ஆய்வு நடத்த வேண்​டும்என கோரிக்கை எழுந்தது.

இந்​நிலை​யில், மத்​திய விலங்​கியல் ஆய்வு மையத்​தைச் சேர்ந்த விஞ்​ஞானிகள் கடந்த ஜனவரி மாதம் பனையூர் பகு​தி​யில் சுமார் 2 கி.மீ. தூரம் ஆய்வு செய்​தனர். அப்​போது சிறியஅளவி​லான சிப்​பிகள் உள்​ளிட்​ட​வற்றை சேகரித்து ஆய்​வுக்கு கொண்டு சென்​றனர்.

இதுதொடர்​பாக இந்​திய விலங்​கியல் ஆய்வு மையம் தற்​போது அறிக்கை வெளி​யிட்​டுள்​ளது. அதில், பனையூர் கடற்​கரை பகு​தி​யில் கண்​டெடுக்​கப்​பட்ட கடல்​சார் புதைபடிமங்​கள் 8 ஆயிரம் முதல் 12ஆயிரம் ஆண்​டு​களுக்கு முற்​பட்​டவை எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து தூத்​துக்​குடியைச் சேர்ந்த வரலாறு மற்​றும் தொல்​லியல் ஆர்​வலர் பெ.​ராஜேஷ் செல்​வரதி கூறிய​தாவது: பனையூரில் கண்​டெடுக்​கப்​பட்ட சிப்​பிகள் (Magallana) மற்​றும் கிளிஞ்​சல்​கள் (Meretrix casta) போன்ற சிற்​றினங்​கள், அலைகளின் வேகம் குறை​வாக உள்ள அமை​தி​யான கடல் அல்​லது முகத்​து​வாரச் சூழலில் மட்​டுமே செழிக்​க கூடிய​வை.

பனையூரில் தற்​போதைய கடற்​கரையி​லிருந்து 5 முதல் 7 கி.மீ. உள்​நோக்கி இந்த புதை படிமங்​கள் கண்​டறியப்​பட்​டிருப்​பது, ஹோலோ​சீன் காலத்தில் கடல் மட்​டம் உயர்ந்து ஆழமான வளை​கு​டாக்​களை உரு​வாக்கி இருந்​ததை நிரூபிக்​கிறது.

இந்த படுக்​கை​களில் சிப்​பிகள், கிளிஞ்​சல்​கள் போன்ற 100-க்​கும் மேற்​பட்ட மாதிரி​கள் ஆவணப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. பனையூர் புதைபடிவப் படுக்​கைகள் வெறும் ஓடு​களின் தொகுப்பு மட்​டுமல்ல. அவை, சுமார் 8,000 முதல் 12,000 ஆண்​டு​களுக்கு முற்​பட்ட ஹோலோ​சீன் ஊழிக்​காலத்​தின் உயர்தர உயி​ரியல் ஆவணம் ஆகும் என விலங்​கியல் ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது பாண்​டிய வம்​சத்​தின் வரலாறு மற்​றும் மறைந்த நகரங்​களான கபாடபுரம், தென்​மதுரையை ஆய்வு செய்​பவர்​களுக்​கு, இலக்​கி​யங்​களில் கூறப்​படும் கடல்​-கோள் நிகழ்​வு​களை உறு​திப்​படுத்​தும் புவி​யியல் சான்​றாக அமை​கிறது. கடந்த பல ஆயிரம் ஆண்​டு​களாக இந்த உயி​ரினங்​களின் உருவ அமைப்​பில் மாற்​றங்​கள் ஏற்​பட​வில்லை என்​பதை இந்த ஆய்வு வெளிப்​படுத்​துகிறது.

இது மன்​னார் வளை​குடா உலகின் மிக நிலை​யான கடல் சூழலமைப்​பு​களில் ஒன்​றாக இருந்​ததைக் காட்​டு​கிறது. எனவே, கீழக்​கரை முதல் திருச்​செந்​தூர் வரையி​லான இந்த வரலாற்று மற்​றும் அறி​வியல் சிறப்​புமிக்க கடற்​கரை மண்​டலத்தை ‘பண்​டைய கடல்​சார் பாரம்​பரிய மண்​டல​மாக’ அறிவிக்க வேண்​டும்.

இந்த பாது​காக்​கப்​பட்ட வளை​கு​டாக்​களின் புவி​யியல் வரலாறு மற்​றும் இந்​தி​யா​வின் கடல்​சார் வளங்​களில் அவற்​றின் பங்கை விளக்​கும் வகை​யில் தூத்​துக்​குடி​யில் தேசிய புவி பூங்கா அமைக்​க வேண்​டும்​.

<div class="paragraphs"><p>தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே  பனையூரில் கண்டெடுக்கப்பட்ட கடல்சார் புதை படிமங்கள்.</p></div>
விசாரணை நீதிமன்றங்களில் 3.50 கோடி குற்றவியல் வழக்குகள் தேக்கம்: நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in