ஆர்டர்லி விவகாரத்தில் டிஜிபி அறிக்கை நம்பும்படியாக இல்லை: உயர் நீதிமன்றம்

தலைமைச் செயலர், உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு
உயர் நீதிமன்றம் 

உயர் நீதிமன்றம் 

Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் உயர​தி​காரி​களின் வீடு​களில் ஒரு​வர்​கூட ஆர்​டர்​லிகளாக பணி​யில் இல்லை என்ற டிஜிபி​யின் அறிக்கை நம்​பும்​படி​யாக இல்லை என தெரி​வித்​துள்ள உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள், தலை​மைச் செயலர் மற்​றும் உள்​துறைச் செயலர் பதிலளிக்க உத்​தர​விட்​டுள்​ளனர்.

தமிழக காவல்​துறை​யில் ஆர்​டர்லி முறையை அறவே ஒழிக்க வேண்​டுமென சென்னை உயர் நீதி​மன்​றம், கடந்த 2022-ம் ஆண்டு உத்​தர​விட்​டிருந்​தது. இந்த உத்​தரவு அமல்​படுத்​தப்​படு​கிறதா என்​பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்​கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிப​தி​கள் ஏற்​கெனவே உத்​தர​விட்​டிருந்​தனர்.

இந்​நிலை​யில், ஆர்​டர்லி முறை இன்​னும் அமலில் உள்​ள​தாக​வும், சுமார் 5 ஆயிரம் பேர் ஆர்​டர்​லிகளாக பணி​யில் உள்​ள​தாக​வும், அதில் 800-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் ஓய்வுபெற்ற போலீஸ் அதி​காரி​களின் வீடு​களில் தொடர்ந்து பணி​யமர்த்​தப்​பட்​டுள்​ள​தாக​வும் நாளிதழ் ஒன்​றில் வந்த செய்​தி​யின் அடிப்​படை​யில் இதுதொடர்​பான வழக்கை நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம், சி.குமரப்​பன் அமர்வு விசா​ரித்​தது. அப்போது மாநில அரசு தலைமைகுற்​றவியல் வழக்​கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி ஒரு​வர் கூட ஆர்​டலிகளாக பணி​யமர்த்​தப்​பட​வில்லை என்றார்.

இந்த வழக்கு நேற்று மீண்​டும் இதே அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது தமிழகத்​தில் ஒரு​வர்​கூட ஆர்​டர்​லிகளாக பணி​யில் இல்லை என்ற டிஜிபி​யின்அறிக்கை நம்​பும்​படி​யாக இல்லை. ஆர்​டர்லி முறை இன்னும் அமலில் உள்​ளது என்​பது அனைவருக்​கும் தெரி​யும் என்ற நீதிப​தி​கள், மேலும் கூறிய​தாவது: ஆங்​கிலேயர் காலத்து அடிமை சாசனம் இன்​னும் தொடரக்​கூ​டாது என்​ப​தற்​காகத்​தான் ஆர்​டர்லி முறையை ஒழிக்க வேண்டுமென்ற நோக்​கில் தமிழக அரசு கடந்த 1979 செப்​.15-ம் தேதி ஆர்​டர்லி முறையை ஒழித்து அரசாணை பிறப்​பித்​தது அந்த அரசாணையை அரசும், போலீஸ் அதி​காரி​களும் மதிப்​பதில்​லை.

ஓய்வுபெற்ற அதி​காரி​களின் வீடு​களி​லும், பணி​யில் உள்ள அதி​காரி​களின் வீடு​களி​லும் ஆர்​டர்​லிகளாக பலர் பணி​யமர்த்தப்​பட்​டுள்​ளனர். கண்​ணி​ய​மான காவல்​துறை​யில் சேர்ந்து பொது​மக்​களின் பாது​காப்​புக்​காக பணி​யாற்​றும் பல போலீ​ஸார், அதிகாரி​களின் வீடு​களில் ஆர்​டர்​லிகளாக தோட்டம், வீட்டு வேலைகளுக்கு பயன்​படுத்​தப்ப​டு​வது ஏற்​புடையதல்ல. அதனால்​தான் இதனை ஒழிக்க நீதி​மன்​ற​ம் உத்​தர​விட்​டது.

ஆனால் 5 ஆயிரம் பேர் ஆர்டர்​லிகளாக பணி​யில் உள்ளனர் என செய்​தி​கள் வெளிவரும் நிலையில், ஒரு​வர்​கூட இல்லை என டிஜிபி அறிக்கை தாக்கல் செய்​துள்​ளார். போலீஸ்காரர்​கள் தேசநலனுக்​காகத்​தான் பணி​யாற்ற வேண்​டும். இந்த விவ​காரத்​தில் உண்மைநிலையை அறிய தமிழக அரசின் தலை​மைச்செயலர், உள்​துறைச் செயலர் ஆகியோரை தாமாக முன்​வந்து எதிர்​மனு​தா​ரர்களாக சேர்க்​கிறோம். அவர்கள் பதிலளிக்க வேண்டும். மாநிலஅரசு தலைமை மற்றும் குற்றவியல் அரசு தலைமை வழக்​கறிஞர்கள் நீதி​மன்​றத்​துக்கு உதவுமாறு உத்​தர​விட்​டு விசாரணையை ஜன.7-க்​கு தள்ளி வைத்தனர்.

<div class="paragraphs"><p>உயர் நீதிமன்றம்&nbsp;</p></div>
தமிழகம் முழுவதும் செவிலியர்கள் போராட்டம்: போராடுவது ஜனநாயக உரிமை அல்ல என அமைச்சர் விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in