திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது: தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது: தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ​இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திருப்​பரங்​குன்​றத்​தில் ஆங்​கிலேயர் ஆட்சி காலத்​தில் நடப்​பட்ட சர்வே தூணில் தீபம் ஏற்ற அனு​ம​திக்க வேண்​டுமென வலது​சாரி அமைப்பை சேர்ந்த சிலர் வற்​புறுத்தி வரு​கின்​றனர்.

நீதி​மன்​றத்​தி​லும் வழக்​கு​களை தொடர்ந்​துள்​ளனர். அந்த சர்வே தூணில் தீபம் ஏற்​று​வதன் மூலம் அப்​பகு​தி​யில் முன்​பிருந்தே இருந்து வந்த சிக்​கந்​தர் தர்​காவை அகற்​றி, மத நல்​லிணக்​கத்தை சீர்​குலைத்​து, மக்​களை பிளவுபடுத்தி அரசி​யல் ஆதா​யம் அடைய வேண்​டும் என்று அவர்​கள் நினைக்​கின்​றனர்

இதன் தொடர்ச்​சி​யாக திருப்​பரங்​குன்​றம் தீப விவ​காரத்​தில் தமிழக அரசு தனது நிலை​ப்பாட்டை வரும் 22-ம் தேதிக்​குள்தெரிவிக்க வேண்​டுமென, சென்னை உயர் ​நீ​தி​மன்​றத்​தின் மதுரை அமர்வு நேற்று முன்​தினம் உத்​தர​விட்​டுள்​ளது.

நீதி​மன்​றத்தை பயன்​படுத்​தி, அரசி​யல் சட்​டத்​துக்கு முரணான தீர்ப்​பு​கள் மற்​றும் உத்​தர​வு​களின் மூலம் சர்வே தூணில் தீபம் ஏற்​றலாம் என்ற கருத்தை அடிப்​படை​யிலேயே அரசு நிராகரிக்க வேண்​டும்

இத்​தகைய முயற்சி நமது அரசி​யல் சட்​டத்​துக்​கும், மதச்​சார்​பற்ற விழு​மி​யங்​களுக்​கும், மத நல்​லிணக்​கத்​திற்​கும் எதி​ரான​தாகும். எனவே, திருப்​பரங்​ குன்​றம் விவ​காரத்​தில் தமிழக அரசு கடந்த காலத்​தில் மேற்​கொண்ட சரி​யான நிலையை இப்​போதும், எதிர்​காலத்​தி​லும் உறு​தி​யோடு முன்​னெடுக்க வேண்​டும்.

வலது​சாரி சார்​புடைய நீதிப​தி​களின் அழுத்​தத்​துக்கு அடிபணி​யாமல் திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்ற அனு​ம​திக்க கூடாது என்​ப​தில் உறு​தி​யாக இருக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​ வலி​யுறுத்​தி​யுள்​ளார்​.

திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது: தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தமிழகத்தில் சாதிவாரி சர்வே நடத்த வேண்டும்: பாமக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in