“விஜய்யும், சீமானும் ஓட்டுகளை பிரிப்பது திமுக கூட்டணிக்கே சாதகம்” - மு.வீரபாண்டியன்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

கோவில்பட்டி: “விஜய்யும், சீமானும் ஓட்டுகளை பிரிப்பதால் திமுக கூட்டணியின் வெற்றி மிகவும் எளிதாகும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளர் கருணாநிதிக்கு ஆதரவு திரட்டும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பேசியது: “ஒரு கட்சி வெற்றி பெறலாம், தோற்கலாம். ஆனால் ஜனநாயகம் தோற்றுவிடக் கூடாது.

பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைபும் பேரபாயம். இந்த தேர்தலில் பாஜக இல்லாமல் அதிமுக தனித்து நின்றிருந்தால் கடுமையான போட்டி இருந்திருக்கும், ஆனால், பாஜகவை அதிமுக அழைத்து வருவதால் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி என்பது மிக இலகுவாகிவிட்டது.

அமைதியாக இருக்கும் தமிழகத்தை பாஜக கெடுக்க முயற்சிக்கிறது. இது தமிழக மக்களுக்கு தெரியும். விஜய்யும், சீமானும் ஓட்டுகளை பிரிப்பார்கள். எனவே, இன்னும் பிரம்மாண்டமான வெற்றியை திமுக கூட்டணி அடையும்” என்று அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு - ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை போட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in