மேல்முறையீடு செய்ய தாமதம் செய்யும் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத் துறை ரகசியமாக விசாரிக்க கோர்ட் உத்தரவு

மேல்முறையீடு செய்ய தாமதம் செய்யும் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத் துறை ரகசியமாக விசாரிக்க கோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: அரசு விவ​காரங்​களில் உரிய காலத்​துக்​குள் மேல்​முறை​யீடு செய்​யாமல் கால​தாமதம் செய்​யும் அதி​காரி​கள் குறித்து லஞ்​ச ஒழிப்​புத் துறை ரகசிய விசா ரணை நடத்த அறி​வுறுத்த வேண்டும் என தலை​மைச் செயலருக்கு உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை முகப்​பேரில் சாலை அமைக்க கையகப்​படுத்​தப்​பட்ட தங்​களுக்கு சொந்​த​மான 27 சென்ட் நிலத்​துக்கு உரிய இழப்​பீடு வழங்​கப்​பட​வில்லை எனக்​கூறி தனி​யார் பள்​ளி அறக்​கட்​டளை தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கு விசா​ரணை​யின்​போது அந்த பள்ளி பொது சாலையை ஆக்​கிரமித்து சுற்​றுச்​சுவர் எழுப்​பி​யிருந்​த​தால் அதை அகற்றி அப்​பகு​தி​யில் சாலை அமைக்​கப்​பட்​ட​தாக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

அதையடுத்து நிலத்தை அளந்து எல்​லையை வரையறை செய்ய உத்​தர​விட்ட தனி நீதிப​தி, ஒரு​வேளை அந்த பள்​ளிக்கு சொந்​த​மான நிலத்​தில் சாலை அமைக்​கப்​பட்டு இருந்​தால் உரிய இழப்​பீடு வழங்க வேண்​டுமென அரசுக்கு கடந்த 2021-ம் ஆண்டு உத்​தர​விட்​டிருந்​தார். இந்த உத்​தரவை எதிர்த்து 4 ஆண்​டு​கள் கால​தாமத​மாக சென்னை மாநக​ராட்சி தரப்​பில்மேல்​முறை​யீடு மனு தாக்கல் செய்​யப்​பட்​டது.

இந்த வழக்கு தொடர்​பான ஆவணங்​களை​யும், கோப்​பு​களை​யும் மற்ற துறை அலு​வலர்​களிட​மிருந்து பெற தாமதம் ஏற்​பட்​ட​தால் மேல்​முறை​யீடு செய்ய காலதாமதம் ஏற்​பட்​டது என்​றும், எனவே 1,421 நாட்​கள் தாமதத்​துடன் தொடரப்​பட்​டுள்ள இந்த வழக்கை விசா​ரணைக்கு ஏற்க வேண்​டுமென்றும் அனு​மதி கோரப்​பட்​டது.

ஆனால் அரசின் இந்த கால​தாமத​மான மேல்​முறை​யீட்டுமனுவை ஏற்க மறுத்த தலைமைநீதிபதி எம்​.எம்​.ஸ்​ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்வு விசாரணைக்குப் பின்பு பிறப்​பித்த உத்​தர​வு: அரசின் கோப்​பு​களை கையாளும் அதி​காரி​கள் சோம்​பேறிகளாக மாறி​விட்​டனர்.

அரசு தொடர்​பான இந்த விவ​காரத்​தில் அதி​காரி​களின் பொறுப்​பற்ற தன்​மை​யால் தனி நீதிப​தி​யின் உத்​தரவை எதிர்த்து மேல்​முறை​யீடு செய்ய 1,421 நாட்​கள் தேவைப்​பட்​டுள்​ளது. இது​போன்ற தாமதங்​களை ஒரு​போதும் அனு​ம​திக்க முடி​யாது.

பல மேல்​முறை​யீட்டு மனுக்​கள் நொண்டி சாக்​கு​களைக்​கூறி அதிக கால​தாமத​மாக தாக்​கல் செய்​யப்​படு​கின்​றன. இதற்கு சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களின் மெத்​தனப்​போக்​குடன் கூடிய அலட்​சி​யம் காரண​மாக இருக்க வேண்​டும். இல்​லை​யென்​றால் எதிர்​தரப்​புடன்கூட்​டணி அமைத்து உடந்​தை​யாக செயல்​பட்டு இருக்க வேண்​டும்.

எனவே இது​போன்ற அரசு விவ​காரங்​களில் உரிய காலத்​துக்​குள் மேல்​முறை​யீடு செய்​யாமல் கால​தாமதம் செய்​யும் அதி​காரி​கள் குறித்து லஞ்​சஒழிப்​புத் துறை ரகசிய விசா​ரணை நடத்த அரசின்தலை​மைச் செயலர் அறி​வுறுத்தவேண்​டும். இவ்வாறு உத்​தர​விட்டு இந்த மேல்​முறை​யீட்டு மனுவை ஏற்​க மறுத்​து நீதிபதிகள் தள்​ளு​படி செய்​தனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in