மெரினாவில் வியாபாரிகளை நெறிப்படுத்தும் விவகாரம்: அதிகாரிகள் ஆஜராகி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

மெரினாவில் வியாபாரிகளை நெறிப்படுத்தும் விவகாரம்: அதிகாரிகள் ஆஜராகி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: மெரினா கடற்​கரை​யில் சாலை​யோர வியாபாரத்தை நெறிப்​படுத்​து​வது தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்​யாதது குறித்து விளக்​கமளிக்க, சுற்​றுச்​சூழல் துறை செயலர், சென்னை மாநக​ராட்சி ஆணை​யருக்கு உத்​தர​விடப்பட்டுள்ளது.

மெரினா கடற்​கரை​யில் கடைகளை ஒதுக்​கக் கோரி, சென்னை திரு​வல்​லிக்​கேணியை சேர்ந்த தேவி என்​பவர் தாக்​கல் செய்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ்கு​மார், ஏ.டி.ஜெகதீஷ் சந்​திரா அடங்​கிய அமர்​வு, “மெரினா கடற்​கரை​யில் சாலை​யோர வியா​பாரத்தை நெறிப்​படுத்த, மாநக​ராட்சி ஏதேனும் திட்​டம் வைத்​திருக்​கிற​தா? சாலை​யோர வியா​பாரி​களின் பிரச்​சினையை எவ்​வாறு தீர்ப்​பது என்​பது குறித்​து, சுற்​றுச்​சூழல், வனத்​துறை செயலர், மாநக​ராட்சி ஆணை​யர் மற்​றும் காவல் துறை அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி, அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும்” என உத்​தர​விட்​டிருந்​தது.

இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​த​போது, ஏற்​கெனவே பிறப்​பித்த உத்​தர​வின்​படி அறிக்கை தாக்​கல் செய்​யப்​ப​டாதது குறித்து அதிருப்தி தெரி​வித்த நீதிப​தி​கள், “உலகத்​தில் 2-வது பெரிய கடற்​கரை​யான மெரினா கடற்​கரை மேம்​பாட்​டில் அக்​கறை காட்​ட​வில்​லை.

எந்த உத்​தரவு பிறப்​பித்​தா​லும் அமல்​படுத்​து​வ​தில்​லை. இதை சரி​யான அணுகு​முறை​யாக கருத முடி​யாது. இது தொடர்​பாக டிச.10-ம் தேதி ஆஜராகி விளக்​கமளிக்க வேண்டும்” என்று சுற்​றுச்​சூழல் துறை செயலர், சென்னை மாநக​ராட்சி ஆணை​யருக்கு உத்​தர​விட்​டனர்.

மெரினாவில் வியாபாரிகளை நெறிப்படுத்தும் விவகாரம்: அதிகாரிகள் ஆஜராகி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு
எஸ்ஐஆர் பணிகளை 2,488 பிஎல்ஓ.கள் 100 சதவீதம் முடித்துள்ளனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in