உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களாக 204 பேருக்கு பதவி கேட்கும் காங்கிரஸ்

சட்​டத்துறை அமைச்​சர் நிர்​மல்குமாருக்கு கடிதம் அளிப்பு
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களாக 204 பேருக்கு பதவி கேட்கும் காங்கிரஸ்
Updated on
1 min read

மதுரை: உச்ச நீதி​மன்​றம், உயர் நீதி​மன்​றம் மற்​றும் மாவட்ட நீதி​மன்​றங்​களில் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த 204 பேரை அரசு வழக்​கறிஞர்​களாக நியமிக்க வேண்​டும் என சட்​டத்​துறை அமைச்​சர் நிர்​மல்​கு​மாருக்கு அக்​கட்சி கடிதம் அளித்​துள்​ளது.

தமிழகத்​தில் சென்னை உயர் நீதி​மன்​றம், மதுரை அமர்வு மற்​றும் மாவட்ட நீதி​மன்​றங்​களில் 500-க்​கும் மேற்​பட்ட அரசு வழக்​கறிஞர் பணி​யிடங்​கள் உள்​ளன. உச்ச நீதி​மன்​றத்​தி​லும் தமிழக அரசு சார்​பில் வாதிட வழக்​கறிஞர்​கள் நியமிக்​கப்​படு​வர். தமிழகத்​தில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதம் கடந்​தும் சென்னை உயர் நீதி​மன்​றம், உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு மற்​றும் மாவட்ட நீதி​மன்​றங்​களுக்கு அரசு வழக்​கறிஞர்​களை நியமிக்​கும் பணி முழுமை அடைய​வில்​லை. தற்​காலிக அரசு வழக்​கறிஞர்​கள் நீதி​மன்​றங்​களில் அரசு சார்​பில் ஆஜராகி வரு​கின்​றனர். இதனிடையே, குற்​ற​வியல் அரசு வழக்​கறிஞர் நியமனத்​துக்கு விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்டு வரு​கின்​றன.

இந்​நிலை​யில் உச்ச நீதி​மன்றம், சென்னை உயர் நீதி​மன்​றம், உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு மற்​றும் மாவட்ட நீதி​மன்​றங்​களில் கூடு​தல் அட்​வகேட், கூடு​தல் அரசு வழக்​கறிஞர், சிறப்பு அரசு வழக்​கறிஞர்​கள், அரசு வழக்​கறிஞர்​கள் என 204 பதவி​களைக் கேட்​டு, சட்​டத்​துறை அமைச்​சர் நிர்மல்குமாருக்கு காங்​கிரஸ் சார்​பில் கடிதம் அளிக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​படி கட்சி நிர்​வாகி​கள் கிரிஷ் சோடங்​கர், சுராஜ் ஹெக்​டே, சுதா எம்​.பி. ஆகியோர் கையெழுத்​திட்ட அக்​கடிதத்​தில் உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சார்​பில் ஆஜராகும் வழக்​கறிஞர்​களில் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்​தவர்​களுக்கு தலா 2 கூடு​தல் அட்​வகேட் ஜெனரல் மற்​றும் ஸ்டேண்​டிங் கவுன்​சில் பதவி​யும், 3 பேனல் வழக்​கறிஞர்​கள் பதவி​யும் கேட்​கப்​பட்​டுள்​ளது. இதே​போல், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் 6 பேருக்​கும், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் 10 பேருக்​கும் ஏஏஜி மற்​றும் அரசு வழக்​கறிஞர் பதவி கேட்​கப்​பட்​டுள்​ளது.

தமிழக மாவட்ட நீதி​மன்​றங்​களில் காங்​கிரஸ் வழக்​கறிஞர்​கள் 181 பேருக்கு அரசு வழக்​கறிஞர் பதவி​யும் கேட்​கப்​பட்​டுள்​ளது. இதற்​காக வழக்​கறிஞர்​களின் பெயர்​களும், அவர்​களைப் பரிந்​துரைத்த காங்​கிரஸ் கட்சியின் நிர்​வாகி​களின் பெயர்​களும் அந்​தக் கடிதத்​தில் இடம்​பெற்​றுள்​ளன. தவெக அரசில் அரசு வழக்​கறிஞர்​கள் பதவியைப் பிடிக்க தவெக வழக்​கறிஞர்​களைக் காட்​டிலும், கூட்​ட​ணிக் கட்சி வழக்​கறிஞர்​கள் கடும் முயற்​சிகளை மேற்​கொண்​டுள்​ளனர்.

தற்​காலிக அரசு வழக்​கறிஞர்​கள் நியமனத்​தில் விடு​தலைச் சிறுத்தைகள் கட்​சி​யினருக்கு வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. 5 எம்​எல்​ஏக்​களின் ஆதரவை அளித்து 2 அமைச்​சர் பதவி, ஒரு மாநிலங்​களவை உறுப்​பினர் பதவியைப் பெற்ற காங்​கிரஸ், தற்​போது கணிச​மான எண்​ணிக்​கை​யில் அரசு வழக்​கறிஞர் பதவிகளைக் கேட்​டும் பகிரங்​க​மாக கடிதம் அளித்​திருப்​பது தவெக வழக்​கறிஞர்​களிடையே அதிர்ச்​சி​யை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களாக 204 பேருக்கு பதவி கேட்கும் காங்கிரஸ்
“இண்டியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளது; 23 கட்சிகள் பங்கேற்க உள்ளன”: காங்கிரஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in