ஜூலை 2-வது வாரத்தில் முதல்வர் விஜய் கரூர் வருகை: உயிரிழந்த 41 பேர் குடும்பத்தை சந்திக்கிறார்

ஜூலை 2-வது வாரத்தில் முதல்வர் விஜய் கரூர் வருகை: உயிரிழந்த 41 பேர் குடும்பத்தை சந்திக்கிறார்
Updated on
1 min read

கரூர்: ​முதல்​வர் விஜய் ஜூலை 2-வது வாரத்​தில் கரூர் வருகை தரவுள்​ளதாக​ தகவல் வெளியாகியுள்ளது. அப்​போது, தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்த 41 பேரின் குடும்​பங்​களைச் சந்​திக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த ஆண்டு செப்​.27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் ஏற்​பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். உயிரிழந்தவர்​களின் குடும்​பத்​தினருக்கு தவெக சார்​பில் தலா ரூ.20 லட்​சம் நிவாரணம் அறிவிக்​கப்​பட்​டது.

இதைத்​தொடர்ந்​து, உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை விஜய் சந்​தித்து ஆறு​தல் கூறி நிதி உதவி அளிக்க திட்​ட​மிட்ட நிலை​யில், பாது​காப்பு உள்​ளிட்ட காரணங்​களால் அவர் கரூர் வர முடிய​வில்லை எனக் கூறப்​பட்​டதால் அந்த நிகழ்வு நடைபெறவில்லை இதையடுத்து உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை மாமல்​லபுரம் வரவழைத்​து, ஆறு​தல் கூறி நிவாரண உதவி வழங்​கி​னார்.

இதனிடையே, கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்​ததைத் தொடர்ந்​து, கரூரில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை முதல்​வர் விஜய் சந்​திக்க வேண்​டும் என பல்​வேறு தரப்​பினரும் கோரிக்கை விடுத்து வந்​தனர். இந்​நிலை​யில், முதல்​வர் விஜய் ஜூலை 2-வது வாரத்​தில் கரூர் வரவுள்​ள​தாக​வும், அப்​போது, கூட்ட நெரிசலில் உயி​ரிழந்த 41 பேரின் குடும்​பத்​தினரை சந்​திக்க உள்​ள​தாக​வும் அதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.

இதுகுறித்து தவெக நிர்​வாகி​களிடம் கேட்​ட​போது, “முதல்​வர் விஜய் ஜூலை 2-வது வாரத்​தில் கரூர் வர உள்​ள​தாக தகவல் வந்​துள்​ளது. அரசு நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​கிறாரா அல்​லது உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை சந்​திக்​கிறாரா என்​பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்​கப்​பட​வில்​லை.

மேலும் திருச்​சி​யில் நடை​பெற்றநன்றி தெரி​விப்​புக் கூட்​டம் போல் கரூரில் மக்​கள் மத்​தி​யில் முதல்​வர் விஜய் பேசவுள்​ள​தாக​வும் இதே​போல் மாநிலம் முழு​வதும் ஒவ்​வொரு மாவட்​ட​மாக முதல்வர் சுற்​றுப் பயணம் மேற்​கொள்​ள​வுள்ளதாகவும் தெரி​கிறது” என்​றனர். தற்​போது கரூர் தொகுதி எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்த அதி​முக முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், முதல்​வர் விஜய் கரூர் வரும்​போது தனது ஆதர​வாளர்​களு​டன் தவெக​வில் இணைய உள்​ள​தாக​வும் கூறப்​படுகிறது.

ஜூலை 2-வது வாரத்தில் முதல்வர் விஜய் கரூர் வருகை: உயிரிழந்த 41 பேர் குடும்பத்தை சந்திக்கிறார்
“பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது” - அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in