தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: பட்டாசு வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: பட்டாசு வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட 3 மசோதாக்களும் மக்களவையில் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார். 

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தேர்தலுக்கு முன்பே மண்ணைக் கவ்விய என்டிஏ. தொகுதி மறுவரையறை கருப்புச் சட்டத்தை எதிர்த்துக் கருஞ்சட்டையோடு ஆண்டிப்பட்டியில் மேடையேறினேன்.

வெற்றிச் செய்தி வந்ததும், மீண்டும் வெள்ளுடைக்கு மாறி, வெடியைப் போட்டுவிட்டு திண்டுக்கல் கூட்டத்தில் மக்கள் ஆர்ப்பரிக்க மேடையேறினேன். தேனியும், திண்டுக்கல்லும் வழங்கும் திடமான வெற்றியோடு, மே-4 ஏழாவது முறையாகக் கழகம் மீண்டும் ஆட்சிக்கட்டில் ஏறும்” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களுக்கும் ஆதரவாக 298 உறுப்பினர்களும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இந்த மசோதாக்கள் வெற்றி பெற மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் ஆதரவாக தேவை. அந்த வகையில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற 326 வாக்குகள் தேவை. அது கிடைக்காத காரணத்தால், மூன்று மசோதாக்களும் தோல்வி அடைந்தன.

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: பட்டாசு வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்களும் மக்களவை வாக்கெடுப்பில் தோல்வி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in