‘வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று...’ - தீரன் சின்னமலைக்கு முதல்வர் விஜய் புகழஞ்சலி

‘வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று...’ - தீரன் சின்னமலைக்கு முதல்வர் விஜய் புகழஞ்சலி
Updated on
1 min read

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவருக்கு புகழஞ்சலி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.

கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலையும், அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்ததோடு, தாய்நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறது.

சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

‘வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று...’ - தீரன் சின்னமலைக்கு முதல்வர் விஜய் புகழஞ்சலி
காவிரி பிரச்சினையில் அரசுக்கு ஆதரவு அளிக்க அனைத்து கட்சிகளும் தயார்: முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in