குழந்தைகள் நலன் பேணும் நிறுவனங்களுக்கு சேவை விருதுகளை வழங்கினார் முதல்வர்

குழந்தைகள் நலன் பேணும் நிறுவனங்களுக்கு சேவை விருதுகளை வழங்கினார் முதல்வர்
Updated on
1 min read

சென்னை: சமூக நலத்​துறை சார்​பில் சட்​டப்​பேர​வை​யில் அறிவிக்​கப்​பட்​டபடி, குழந்​தைகள் நலன் மற்​றும் சிறப்பு சேவை​கள் இயக்​ககத்​தின் கீழ் செயல்​படும் நிறுவனங்கள், அலகு​களை அங்​கீகரிப்​ப​தற்​காக​வும், ஊக்​கு​விப்​ப​தற்​காக​வும் குழந்​தைகள் நலன் - சேவை விருதுகள் வழங்​கப்​படு​கிறன்ன.

இந்த ஆண்​டுக்​கான விருதுகள் - அரசு குழந்​தைகள் இல்​லங்​கள் என்ற பிரி​வில் தஞ்​சாவூர் அன்னை சத்யா அம்​மை​யார் நினைவு அரசினர் குழந்​தைகள் இல்​லம், தன்​னார்​வத் தொண்டு நிறு​வனங்​களின் கீழ் செயல்​படும் குழந்​தைகள் இல்​லங்​கள் என்ற பிரி​வில் தூத்​துக்​குடி புனித மரியன்னை கருணை இல்​லம், சட்​டத்​துக்கு முரணாக செயல்​பட்​ட​தாக கருதப்​படும் குழந்​தைகளுக்​கான இல்​லங்​கள் என்ற பிரி​வில் சென்னை அரசினர் கூர்​நோக்கு இல்​லம் மற்​றும் மாவட்ட குழந்தைகள் பாது​காப்பு அலகு என்ற பிரி​வில் ராம​நாத​புரம் மாவட்ட குழந்தைகள் பாது​காப்பு அலகு ஆகிய​வற்​றுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் விருது வழங்கினார்.

பரிசுத் தொகை​யாக தலா ரூ.1 லட்​சத்​துக்​கான காசோலைகளை​யும் வழங்​கி​னார்.

அமைச்​சர் கீ​தாஜீவன், தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், சமூக நலத் துறைச் செயலர் ஜெய ஸ்ரீமுரளிதரன், குழந்தைகள் நலன் மற்​றும் சிறப்பு சேவை​கள் துறை இயக்​குநர் ஷில்பா பிர​பாகர் சதீஷ் ஆகியோர் பங்கேற்றனர் என்று தமிழக அரசு செய்​திக்​குறிப்​பில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள் நலன் பேணும் நிறுவனங்களுக்கு சேவை விருதுகளை வழங்கினார் முதல்வர்
ஆருத்ரா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை ரூ.1.50 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in