பயணிகளின் தேவைக்காக எழும்பூர் உட்பட 4 ரயில் நிலையங்களில் மருத்துவ வசதி ஏற்படுத்த ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை கோட்டம்

பயணிகளின் தேவைக்காக எழும்பூர் உட்பட 4 ரயில் நிலையங்களில் மருத்துவ வசதி ஏற்படுத்த ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை கோட்டம்
Updated on
1 min read

சென்னை: பயணி​களின் மருத்​துவ தேவைக்​காக, சென்னை எழும்​பூர், தாம்​பரம், காட்​பாடி, செங்​கல்​பட்டு ரயில் நிலை​யங்​களில் மருந்​தகங்​களு​டன் கூடிய அவசர மருத்​துவ வசதி​களை ஏற்​படுத்த, சென்னை ரயில்வே கோட்​டம் ஒப்​பந்​தப்​புள்ளி கோரி​யுள்​ளது.

தெற்கு ரயில்​வே​யில் முக்​கிய கோட்​ட​மாக, சென்னை ரயில்வே கோட்​டம் உள்​ளது. இந்த கோட்​டத்​தில் சென்னை சென்ட்​ரல், எழும்பூர், தாம்​பரம், செங்​கல்​பட்​டு, அரக்​கோணம், காட்​பாடி, திரு​வள்​ளூர் உட்பட பல முக்​கிய ரயில் நிலை​யங்​கள் உள்​ளன.

இந்த ரயில் நிலை​யங்​களை நாள்​தோறும் லட்​சக்​கணக்​கான மக்​கள் பயன்​படுத்​துகின்​றனர். இங்கு வருபவர்​களுக்கு திடீரென அவசர மருத்​துவ உதவி தேவை என்​றால், ரயில்வே உதவி எண், ரயில் மதத் என்ற இணையதளம் மூல​மாக தொடர்பு கொண்டு தேவை​யான மருத்​துவ சிகிச்சை அளிக்​கப்​படு​கிறது.

சில முக்​கிய ரயில் நிலை​யங்​களில் தனி​யாருடன் இணைந்து பயணி​களுக்கு முதலுதவி மற்​றும் ஆம்​புலன்ஸ் வசதி செய்​யப்​பட்​டுள்​ளது. இருப்​பினும், முக்​கிய ரயில் நிலை​யங்​களில் மருத்​துவ வசதி ஏற்​படுத்த கோரிக்கை விடுக்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில், பயணி​களுக்கு அவசர மருத்​துவ தேவைக்​காக, சென்னை எழும்​பூர், தாம்​பரம், காட்​பாடி, செங்​கல்​பட்டு ஆகிய ரயில் நிலை​யங்​களில் மருந்​தகங்​களு​டன் கூடிய அவசர மருத்​துவ வசதி​களை ஏற்​படுத்த சென்னை ரயில்வே கோட்​டம் ஒப்​பந்​தப்​புள்ளி கோரி​யுள்​ளது.

இதுகுறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறிய​தாவது: சென்னை எழும்​பூர், தாம்​பரம், காட்​பாடி, செங்​கல்​பட்டு ஆகிய 4 ரயில் நிலை​யங்​களில் 24 மணி நேர​மும் இயங்​கும் மருந்​தகங்​களு​டன் கூடிய அவசர மருத்​துவ அறை​கள் செயல்​படு​வதற்​கும், பராமரிப்​ப​தற்​கும் தகு​தி​யான நிறு​வனங்​களிட​மிருந்து ஒப்​பந்​தப் புள்ளி வரவேற்​கப்​படு​கிறது.

பயணி​கள் மற்​றும் ரயில் நிலை​யத்​தைப் பயன்​படுத்​துபவர்​களுக்​குத் தேவை​யான அவசர மருத்​துவ உதவி​களை உடனுக்​குடன் வழங்​கு​வதே இதன் நோக்​க​மாகும்.

இந்த மருத்​துவ அறை​களில் பயிற்சி பெற்ற மருத்​து​வப் பணி​யாளர்​கள், முதலுதவி வசதி​கள், அவசர சிகிச்சை ஆதர​வு, அத்​தி​யா​வசிய மருந்​துகள், ஆம்​புலன்ஸ் சேவை மற்​றும் உயிர் காக்​கும் மருத்​து​வக் கருவி​கள் ஆகியவை 24 மணி நேர​மும் தடை​யின்றி கிடைக்க வழி​வகை செய்​யப்​படும்.

இத்​திட்​டத்​துக்​கான தகு​தி​யான மருத்​து​வ​மனை​கள், சுகா​தார சேவை நிறு​வனங்​கள் மற்​றும் தேவை​யான அனுபவ​மும், சட்​டப்​பூர்வ உரிமங்​களும் கொண்ட மருத்​துவ முகமை​கள் இந்​தத் திறந்​தநிலை மின்​-ஒப்​பந்​தப் புள்​ளி​யில் பங்​கேற்​கலாம்.

இந்த ஒப்​பந்​தப் புள்ளி மூல​மாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட நிறு​வனங்​கள், அதி​கப்​படி​யான பயணி​கள் வந்து செல்​லும் முக்​கிய ரயில் நிலை​யங்​களில் தங்​களின் பிராண்ட் அடை​யாளத்தை தொடர்ந்து வெளிப்​படுத்​திக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்​பாகும்.

விருப்​ப​முள்ள ஏலதா​ரர்​கள் இந்​திய ரயில்​வே​யின் மின்​-​கொள்​முதல் அமைப்பு இணை​யதள​மான www.ireps.gov.in மூலம் ஜூன் 1-ம் தேதி பிற்​பகல் 3 மணிக்​குள் ஒப்​பந்​தப் புள்​ளி​களைச் சமர்ப்​பிக்​கலாம்.

இது தொடர்​பான கூடு​தல் விவரங்​கள் மற்​றும் சந்​தேகங்​களுக்கு 80721 14520 என்ற எண்​ணை தொடர்​பு கொள்​ளலாம்​. இவ்​வாறு அவர்​கள்​ தெரி​வித்​தனர்​.

பயணிகளின் தேவைக்காக எழும்பூர் உட்பட 4 ரயில் நிலையங்களில் மருத்துவ வசதி ஏற்படுத்த ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை கோட்டம்
காலி மது பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை எதிர்த்து டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in