

சிங்கபெருமாள்கோவில் - செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 20 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முழுமையாக ரத்து: தாம்பரம் - விழுப்புரம் இடையே இன்று (ஏப்.12) காலை 9.40 மணிக்கு புறப்படும் மெமுரயில், காஞ்சிபுரம்- சென்னை கடற்கரைக்கு காலை 9.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆகிய இரண்டு ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.
பகுதி ரத்து: விழுப்புரம் - சென்னை கடற்கரைக்கு இன்று மதியம் 1.30 மணிக்கு புறப்பட வேண்டிய மெமு ரயில், தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை கடற்கரை - காஞ் சிபுரத்துக்கு இன்று அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், வாலாஜா வரை மட்டுமே இயக்கப்படும்.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு இன்று காலை 8.10, 9.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு இன்று காலை 8.50, 10.00 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் கள் காட்டாங்கொளத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு இன்று காலை 8.45. 9.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டு சிங்கபெருமாள்கோவிலில் இருந்து புறப்படும்.
செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு இன்று காலை 10.40, பகல் 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், காட்டாங்கொளத்தூரில் இருந்து இயக்கப் படும்.
இது தவிர, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மேலும் 8 ரயில் சேவைகள் பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.