சென்னையில் 2-வது ‘ஏசி’ மின்சார ரயில் சேவை: மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வருகிறது

சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தயாரிக்கப்பட்ட 2-வது ஏசி மின்சார ரயில் தற்போது அண்ணனூர் ரயில்வே யார்டில் நிறுத்தி, பலவித சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தயாரிக்கப்பட்ட 2-வது ஏசி மின்சார ரயில் தற்போது அண்ணனூர் ரயில்வே யார்டில் நிறுத்தி, பலவித சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

Updated on
2 min read

சென்னை: சென்​னை​யில் 2-வது ஏசி மின்​சார ரயில் சேவையை விரை​வில் தொடங்க ரயில்வே நிர்​வாகம் திட்​ட​மிட்​டுள்​ளது. இந்த ரயிலை சென்​ட்ரல் - அரக்​கோணம் மார்க்​கத்​தில் இயக்​கு​வது தொடர்​பாக​வும் ஆலோ​சிக்​கப்​படு​கிறது.

சென்னை ஐ.சி.எப். ஆலை​யில், தயாரிக்​கப்​பட்ட 12 பெட்​டிகள் கொண்ட முதல் ‘ஏசி’ மின்​சார ரயில் கடந்த ஆண்டு ஏப்​.19-ம் தேதி தொடங்​கப்​பட்​டது. இந்த ரயில் சென்னை கடற்​கரை - செங்​கல்​பட்டு மார்க்​கத்​தில் இயக்​கப்​படு​கிறது. இந்த ரயிலுக்கு பயணி​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு கிடைத்து வரு​கிறது.

இதற்​கிடை​யில், சென்னை சென்ட்​ரல் - அரக்​கோணம், கடற்​கரை - செங்​கல்​பட்டு ஆகிய இரு மார்க்​கங்​களில் `பீக் ஹவர்​சில்' கூடு​தல் ஏசி மின்​சார ரயில்​கள் இயக்க பயணி​கள் கோரிக்கை விடுத்து வந்​தனர்.

இந்த கோரிக்​கை​யின் பேரில், கூடு​தல் மின்​சார ரயில் இயக்க ரயில்வே வாரி​யத்​துக்கு தெற்கு ரயில்வே பரிந்​துரை செய்​திருந்​தது. ரயில்வே வாரிய​மும் தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்​டத்​துக்கு ஏசி மின்​சார ரயில் தயாரித்து வழங்க, ஐ.சி.எஃப்​-இடம் கேட்​டிருந்​தது.

இதற்​கிடை​யில், சென்னை சென்ட்​ரல் - அரக்​கோணம், கடற்​கரை - செங்​கல்​பட்டு ஆகிய இரு மார்க்​கங்​களில் `பீக் ஹவர்​சில்' கூடு​தல் ஏசி மின்​சார ரயில்​கள் இயக்க பயணி​கள் கோரிக்கை விடுத்து வந்​தனர்.

இந்த கோரிக்​கை​யின் பேரில், கூடு​தல் மின்​சார ரயில் இயக்க ரயில்வே வாரி​யத்​துக்கு தெற்கு ரயில்வே பரிந்​துரை செய்​திருந்​தது. ரயில்வே வாரிய​மும் தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்​டத்​துக்கு ஏசி மின்​சார ரயில் தயாரித்து வழங்க, ஐ.சி.எஃப்​-இடம் கேட்​டிருந்​தது.

இதையடுத்​து, 2-வது ஏசி மின்​சார ரயில் தயாரிப்பு பணி சென்னை ஐ.சி.எஃப் ஆலை​யில் கடந்த ஆண்டு தொடங்​கி, நடை​பெற்று வந்​தது. இப்​பணி இரண்டு மாதம் முன்பு நிறைவடைந்​தது.

இதையடுத்​து, இந்த ஏசி மின்​சார ரயிலை தெற்கு ரயில்​வே​யின் சென்னை ரயில்வே கோட்​டத்​துக்கு ஒரு மாதத்​துக்கு முன்பு அனுப்பி வைக்​கப்​பட்​டது. இந்த ரயில், தற்​போது அண்​ணனூர் ரயில்வே யார்​டில் நிறுத்​தி, பல்​வேறு சோதனை​களுக்கு உட்​படுத்​தப்​படு​கிறது. இந்த ரயில் சென்ட்​ரல் - அரக்​கோணம் மார்க்​கத்​தில் இயக்​கி​யும் சோதிக்​கப்​படு​கிறது.

இது குறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறிய​தாவது: சென்னை சென்ட்​ரல் - அரக்​கோணம் மார்க்​கத்​தில் தினசரி சுமார் 200-க்​கும் மேற்​பட்ட மின்​சார ரயில் சேவை​கள் இயக்​கப்​படு​கின்​றன. இந்த ரயில்​களில் தினசரி சுமார் 4 லட்​சம் பேர் பயணிக்​கின்​றனர்.

தினசரி காலை, மாலை​யில் `பீக் ஹவர்​சில்' மின்​சார ரயில்​களில் கூட்​டம் நிரம்பி வழிகிறது. கூடு​தல் மின்​சார ரயில்​கள் மற்​றும் ஏசி மின்​சார ரயில் இயக்​க​வும் பயணி​கள் கோரிக்கை விடுத்து வரு​கின்​றனர்.

அவர்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்​றும் வித​மாக, இந்த மார்க்​கத்​தில் ஏசி மின்​சார ரயில் இயக்​கு​வது தொடர்​பாக ஆலோ​சிக்​கப்​படு​கிறது. இது​போல, செங்​கல்​பட்டு - கடற்​கரை தடத்​தி​லும் மேலும் ஒரு ஏசி மின்​சார ரயில் இயக்​க​வும் பரிந்​துரை உள்​ளது.

எனவே, எந்த மார்க்​கத்​தில் இயக்​கு​வது என்பது குறித்து முடிவு செய்​து, ஏசி மின்​சார ரயில் சேவையை விரை​வில் தொடங்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. 12 பெட்​டிகள் கொண்ட இந்த ரயி​லில் அமர்ந்​த​படி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்​தம்​ 4,914 பேர்​ பயணிக்​க முடி​யும்​. இவ்​வாறு அவர்கள் கூறினர்.

<div class="paragraphs"><p>சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தயாரிக்கப்பட்ட 2-வது ஏசி மின்சார ரயில் தற்போது அண்ணனூர் ரயில்வே யார்டில் நிறுத்தி, பலவித சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.</p></div>
சென்னையில் வசிப்பவர்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்வதால் விமான டிக்கெட் கட்டணம் உயர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in