திமுக தலைவர்கள் பற்றி அவதூறு புகார்களை சிபிஐ-க்கு மாற்றக்கோரி வழக்கு

திமுக தலைவர்கள் பற்றி அவதூறு புகார்களை சிபிஐ-க்கு மாற்றக்கோரி வழக்கு
Updated on
1 min read

சென்னை: ​தி​முக தலை​வர்​களை களங்​கப்​படுத்தி சமூக வலைத்​தளங்​களில் அவதூறு பரப்​புவது தொடர்​பான புகார்​களை சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றக்​கோரி தொடரப்​பட்ட வழக்​கில், போலீ​ஸார் இரு​வாரங்​களில் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

திமுக சட்​டப்​பிரிவு துணைச் செய​லா​ள​ரான சந்​திர​போஸ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “சமூக வலைத்​தளங்​களின் வாயி​லாக திமுகவை​யும், திமுக தலை​வர்​களை​யும் களங்​கப்​படுத்​தும் வகை​யில் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பம் மூலம் உரு​வாக்​கப்​பட்ட புகைப்​படங்​களை​யும், வீடியோக்​களை​யும் சில தனிப்​பட்ட இணைய அமைப்​பு​களும், தனி​நபர்​களும் பொது வெளி​யில் பரப்பி வரு​கின்​ற​னர்.

இதுதொடர்​பாக தமி​ழ​கம் முழு​வதும் பல்​வேறு காவல் நிலை​யங்​களில் வாய்ஸ் ஆஃப் காமன், ரூட் உள்​ளிட்ட அமைப்​பு​களுக்கு எதி​ராக 19 புகார்​கள் அளிக்​கப்​பட்​டும், எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை.

இதுவே தவெகவைச் சேர்ந்​தவர்​களுக்கு எதி​ராக கொள்கை ரீதி​யாக கருத்து தெரி​விப்​பவர்​கள் மீது மட்​டும் உடனடி​யாக வழக்​குப்​ப​திவு செய்து போலீ​ஸார் நடவடிக்​கை​யில் இறங்​கு​கின்​ற​னர்.

எனவே இதுதொடர்​பாக திமுக சார்​பில் அளிக்​கப்​பட்​டுள்ள புகார்​களை சிபிஐ விசா​ரணைக்கு மாற்றி நியாய​மான, சுதந்​திர​மான விசா​ரணை நடத்த உத்​தர​விட வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி வி. லட்​சுமி​நா​ராயணன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் என்​.ஆர்​. இளங்கோ ஆஜராகி வாதிட்​டார்.

இது தொடர்​பாக தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணை​யர் உள்​ளிட்​டோர் இரு வாரங்​களில் பதிலளிக்க நீதிபதி உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​துள்​ளார்​.

திமுக தலைவர்கள் பற்றி அவதூறு புகார்களை சிபிஐ-க்கு மாற்றக்கோரி வழக்கு
சுபமுகூர்த்த தினமான ஆக.31-ம் தேதி சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in