நீட் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறை வகுக்க கோரிய வழக்கு தள்ளுபடி

நீட் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறை வகுக்க கோரிய வழக்கு தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை: நீட் தேர்வை நேர்​மை​யாக, வெளிப்​படைத் தன்​மை​யுடன் நடத்​தும் வகை​யில் நிலை​யான வழி​காட்டி நெறி​முறை​களை வகுக்க மத்​திய அரசுக்கு உத்​தர​விடக் கோரி கிருஷ்ணகிரி மாவட்​டம் ஓசூரைச் சேர்ந்த வெங்கடேஸ்​வரன் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​தார்.

தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்வு இந்த வழக்கை விசா​ரித்​தது.

“நீட் தேர்வு தொடர்​பாக வழி​காட்டு நெறி​முறை​களை வகுக்​கு​மாறு உச்ச நீதி​மன்​றம் கடந்த 2024-ம் ஆண்டே மத்​திய அரசுக்கு உத்​தர​விட்​டுள்​ளது.

தற்​போது வினாத்​தாள் கசிந்​தது தொடர்​பாக​வும் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. அதை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், இதுகுறித்து பதில் அளிக்க மத்​திய அரசுக்​கும், தேசிய தேர்வு முகமைக்​கும் உத்​தர​விட்டு விசா​ரணையை ஜூலைக்கு தள்​ளி​வைத்​துள்​ளது” என்று கூறி வழக்கை தள்​ளு​படி செய்​து உத்​தர​விட்​டனர்​.

நீட் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறை வகுக்க கோரிய வழக்கு தள்ளுபடி
பல்கலை., அரசு கல்லூரிகளில் காலியாகவுள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப போர்க்கால நடவடிக்கை: ஆளுநர் உரையில் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in