தேர்​தல் விதிமீறல்: இந்திய கம்யூனிஸ்ட் எம்​எல்ஏ மீது வழக்கு

தேர்​தல் விதிமீறல்: இந்திய கம்யூனிஸ்ட் எம்​எல்ஏ மீது வழக்கு
Updated on
1 min read

ஓசூர்: தேன்​க​னிக்​கோட்​டை​யில் தேர்​தல் விதியை மீறிய​தாக தளி எம்​எல்​ஏ​வும் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் வேட்​பாள​ரு​மான ராமச்​சந்​திரன் உட்பட 2,500 பேர் மீது போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்​டம் தளி சட்​டப்​பேரவைத் தொகு​தி​யில் போட்​டி​யிடு​வதற்​காக கடந்த 2-ம் தேதி இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் தளி எம்​எல்ஏ ராமச்​சந்​திரன் தனது கட்​சி​யினர் மற்​றும் கூட்​டணி கட்​சி​யினருடன் சந்​தைபேட்டை மைதானத்​திலிருந்து ஊர்​வல​மாக வட்டாட்​சி​யர் அலு​வல​கத்​துக்கு சென்று வேட்புமனு தாக்​கல் செய்​தார்.

இதனால் போக்​கு​வரத்​துக்கு இடையூறு ஏற்​படுத்தி தேர்​தல் விதி​களை மீறிய​தாக பறக்​கும்​படை அதி​காரி பிர​சாந்த்​கு​மார் தேன்​க​னிக்​கோட்டை காவல்​நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​பேரில் போலீ​ஸார் எம்​எல்ஏ ராமச்​சந்​திரன் உள்​ளிட்ட 2,500 பேர் மீது வழக்கு பதிவு செய்​தனர்​.

தேர்​தல் விதிமீறல்: இந்திய கம்யூனிஸ்ட் எம்​எல்ஏ மீது வழக்கு
“பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை” - திருமாவளவன் திடீர் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in