தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு வேட்பாளர்களின் வேட்புமனு விவரங்கள் சரிபார்க்கப்படும்

உதயநிதி மீதான வழக்கில் வருமான வரித்துறை பதில் மனு
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு  வேட்பாளர்களின் வேட்புமனு விவரங்கள் சரிபார்க்கப்படும்
Updated on
2 min read

சென்னை: தேர்​தல் முடிவு​கள் வெளி​யான பிறகு வேட்பாளர்களின் வேட்​புமனுக்​களில் கூறப்​பட்​டுள்ள அனைத்து விவரங்களும் சரி​பார்க்​கப்​படும் என வரு​மான வரித்​துறை உயர் நீதி​மன்றத்​தில் பதில்​ மனு தாக்​கல் செய்​துள்​ளது.

சென்னை சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி தொகு​தி​யில் திமுக வேட்​பாள​ராக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் போட்டியிடுகிறார். இந்​நிலை​யில் அவர் தாக்​கல் செய்​துள்ள வேட்புமனுவுக்கும், கடந்த 2021-ம் ஆண்டு தாக்​கல் செய்​திருந்த வேட்புமனுவுக்கும் ஏராள​மான முரண்​பாடு​கள் உள்​ள​தாகக் கூறி அத்​தொகுதி வாக்​காள​ரான குமார​வேல் என்​பவர், சென்னை உயர் நீதி​மன்​றத்தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அதில், “உதயநிதி ஸ்டா​லின் கடந்த 2021-ல் தாக்​கல் செய்​திருந்த வேட்​புமனு​வில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறு​வனத்​தில் ரூ.7.36 கோடி முதலீடு செய்​துள்​ள​தாக தெரி​வித்​திருந்​தார். ஆனால் தற்​போது தாக்​கல் செய்​துள்ள வேட்​புமனு​வில் அந்த விவரம் மறைக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால் அவரது மனைவி அதே ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறு​வனத்​தில் ரூ.2.63 கோடி முதலீடு செய்​துள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த 2021-ல் ஸ்னோ ஹவுசிங் நிறு​வனத்​துக்கு ரூ.11.06 கோடி கடன் கொடுத்​துள்​ள​தாக குறிப்​பிட்​டுள்ள உதயநி​தி, தற்​போது கடன் தொகை ரூ.10 கோடி என குறிப்​பிட்​டுள்​ளார். எஞ்​சிய ரூ.1.06 கோடி திருப்பி செலுத்​தப்​பட்டு விட்​டதா என்​பது குறித்​தும் தெரிவிக்​க​வில்​லை.

கடந்த 2020-ல் தனது வரு​மானம் ரூ.2 கோடி எனக் குறிப்​பிட்​டுள்ள உதயநிதி தற்​போது ரூ.10.98 கோடி வரு​மானம் உள்​ள​தாகக் குறிப்​பிட்​டுள்​ளார். வரு​மானம் மற்​றும் சொத்து அதி​கரிப்பு குறித்து வேட்​புமனு​வில் உரிய விளக்​கங்​கள் தெரிவிக்​கப்​பட​வில்​லை. எனவே இதுதொடர்​பாக வரு​மான வரித்​துறை மற்​றும் கம்​பெனி விவ​காரத்​துறை விசா​ரணை நடத்தி அறிக்கை தாக்​கல் செய்ய உத்​தர​விட வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த தலைமை நீதிபதி அமர்​வு, இதுதொடர்​பாக வரு​மான வரித்​துறை பதிலளிக்க உத்​தர​விட்​டிருந்​தது. இந்​நிலை​யில், வரு​மான வரித்​துறை புல​னாய்வு தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யின் துணை இயக்​குந​ரான ஜி.சுதர்​சன் தாக்​கல் செய்​துள்ள பதில்​ மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது:

நாடாளு​மன்​றம் மற்​றும் சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​களின்​போது வேட்​பாளர்​கள் தாக்​கல் செய்​யும் சொத்து விவரங்​களில் கூறப்​பட்​டுள்ள விவரங்​களை சரி​பார்க்க நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​களை நேரடி வரி​கள் வாரி​யம் கடந்த 2019-ம் ஆண்டு வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி தேர்​தல் முடிவு​கள் வெளி​யானதும் வேட்​பாளர்​களின் வேட்​புமனுக்​களில் கூறப்​பட்​டுள்ள அனைத்து விவரங்​களும் தாமாக முன்​வந்து சரி​பார்க்​கப்​படும்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு  வேட்பாளர்களின் வேட்புமனு விவரங்கள் சரிபார்க்கப்படும்
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

இந்த பணி​களை 150 நாட்​களுக்​குள் முடிக்க வேண்​டும் என்​றும் நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​களில் காலக்​கெடு விதிக்​கப்​பட்​டுள்​ளது. துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லி்ன் மற்​றும் அவரது மனைவி கிருத்​திகா தொடர்​பான கடந்த 5 ஆண்​டு​கால வரு​மான வரி தாக்​கல் தொடர்​பான விவரங்​களை​யும், சொத்து விவரங்​களை​யும் விரி​வான ஆய்வு மேற்​கொள்​ளாமல் தற்​போது எந்த ஒப்​பீடும் செய்ய முடி​யாது.

தற்​சம​யம் அதுதொடர்​பான ஆவணங்​கள் எங்​கள் கைவசம் இல்லை என்​ப​தால் அவற்றை ஆய்வு செய்ய போதிய அவகாசம் வழங்க வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கோரப்​பட்​டிருந்​தது. அதையடுத்து, நீதிப​தி​கள் இந்த வழக்கு விசா​ரணையை ஜூன் மாதத்​துக்கு தள்​ளி​வைத்​துள்​ளனர்​.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு  வேட்பாளர்களின் வேட்புமனு விவரங்கள் சரிபார்க்கப்படும்
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in