

பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு, வாக்குசேகரித்த அதிமுக வேட்பாளர் ராஜசேகர்.
செய்யூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 13 பேர் களத்தில் உள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - சிந்தனை செல்வன்
திமுக கூட்டணியில் விசிக சார்பில் போட்டியிடும் சிந்தனை செல்வன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவேன்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க குரல் கொடுப்பேன், கிழக்கு கடற்கரை சாலையோர கிராமங்களில் தேவைப்படும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என உறுதிகூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
செய்யூரில் கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விசிக வேட்பாளர் சிந்தனை செல்வன்.
அதிமுக - ராஜசேகர்
அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜசேகர், பவூஞ்சூரில் அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை, கிழக்கு கடற்கரை சாலை சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்துதல், செய்யூரில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மற்றும் கிராமப்புற பேருந்து சேவைகளை மேம்படுத்தப்படும், உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என பிரச்சாரம் செய்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சி - சுவாதிலட்சுமி
நாதக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுவாதிலட்சுமி, விவசாயிகளுக்கான திட்டங்களை முறையாகச் செயல்படுத்த நடவடிக்கை, கிராமப்புற சாலை திட்டங்கள் முறைப்படுத்தப்படும்.
மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுவாதிலட்சுமி.
உள்ளூர் மக்கள் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை, மீனவ மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்தப்படும் என பிரச்சாரம் செய்து வருகிறார்.
தமிழக வெற்றிக்கழகம் - மோகன்ராஜா
தவெக சார்பில் போட்டியிடும் மோகன்ராஜா, மீனவர்களுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம், கடப்பாக்கம் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துதல், விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் நலத்திட்டங்களை தடையின்றி கிடைக்கவும், அதுதொடர்பாக விவசாயிகள் அறியும் வகையில் குழு அமைத்து செயல்படுவேன் என்றும் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
வாகனத்தில் வீதிதோறும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மோகன்ராஜா.
செய்யூர் தொகுதி வேட்பாளர்கள் அனைவரும் வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்கு சேகரித்து வருகின்றனர். இதில் வாக்குகளை அள்ளப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.