புதுச்சேரிக்கான மகத்தான திட்டங்கள் விரைவில் வரும்: குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்

புதுச்சேரி குமரகுருபள்ளத்தில் ரூ. 45.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 216 குடியிருப்புகளை பயனாளிகளுக்கு ஒப்படைத்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். உடன் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், ஜான்குமார் உள்ளிட்டோர். | படம்: எம்.சாம்ராஜ் |

புதுச்சேரி குமரகுருபள்ளத்தில் ரூ. 45.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 216 குடியிருப்புகளை பயனாளிகளுக்கு ஒப்படைத்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். உடன் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், ஜான்குமார் உள்ளிட்டோர். | படம்: எம்.சாம்ராஜ் |

Updated on
1 min read

புதுச்சேரி: ‘புதுச்சேரிக்கான மகத்​தான திட்​டங்​கள் விரை​வில் வரவுள்​ளன. பிரதமர் மோடி வரு​கை​யின்​ போது அவை செயல்​வடிவம் பெறும்’ என்று குடியரசு துணைத்​தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் தெரி​வித்​தார்.

புது​வைக்கு ஒரு​நாள் சுற்​றுப்​பயண​மாக குடியரசு துணைத்​தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் நேற்று வருகை தந்​தார். குடியரசு துணைத்​தலை​வ​ராக சி.பி.​ரா​தாகிருஷ்ணன் பதவி​யேற்​றபின் முதன்​முறை​யாக புது​வைக்கு வரு​வதையொட்டி அரசு சார்​பில் அவருக்கு பொது வரவேற்பு கம்​பன் கலை​யரங்​கில் அளிக்​கப்​பட்​டது.

மேலும் ராஜ்பவன் தொகுதி குமரகுருபள்​ளத்​தில் ரூ.45.5 கோடி​யில் புதி​தாக கட்​டப்​பட்​டுள்ள 216 குடி​யிருப்​பு​களை பயனாளி​களுக்கு ஒப்​படைக்​கும் விழா​வும் நடந்​தது. விழா​வில், உள்​துறை அமைச்​சர் நமச்​சி​வா​யம் வரவேற்​றார். துணைநிலை ஆளுநர் கைலாஷ்​நாதன் தலைமை வகித்​தார்.

முதல்​வர் ரங்​க​சாமி முன்​னிலை வகித்​தார். பயனாளி​களுக்கு குடி​யிருப்புசாவியை குடியரசு துணைத்​தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் வழங்கி பேசி​ய​தாவது: தமிழ் மீது பிரதமர் மோடிக்கு உள்ள அளப்​பரிய பாசத்தை தொடர்ந்து வெளிப்​படுத்தி வரு​கிறார்.

‘மன​தின் குரல்’ நிகழ்​வுக்​காக வானொலி​யில் பேசி​ய​போது, ‘தமிழ்​தான் மிக தொன்​மை​யான இந்​திய மொழி’ என்​பதை உலகுக்கு பறை​சாற்றியுள்​ளார். தமிழர்​கள் மீதும் கொண்​டுள்ள பாசத்​தின் காரண​மாக ‘ஸ்​மார்ட் சிட்​டி’ திட்​டங்​களை தமிழகத்​துக்​கும், புது​வைக்​கும் அதி​க​மாக அளித்​துள்​ளார்.

இந்த ‘ஸ்​மார்ட் சிட்​டி’ திட்​டத்​தின்​கீழ் புது​வை​யில் ஏழை மக்​களுக்கு குடி​யிருப்​பு​களை கட்​டி, தற்​போது வழங்​கு​கிறோம். 10 கோடி விவ​சாய மக்​களுக்கு ஆண்​டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்​கப்​படு​கிறது. விவ​சா​யிகளுக்கு பென்​ஷன் திட்​ட​மாக இது விளங்​கு​கிறது. புதுவை மாநிலம் மிகப்​பெரும் வளர்ச்சி பெற வேண்​டும்.

புது​வை​யில் செயல்​படுத்த வேண்​டிய திட்​டங்​கள் பற்றி பிரதமருடன் துணைநிலை ஆளுநர் பேசி​யுள்​ளார். அதைப்​பற்றி ஆளுநர் என்​னிடம் கூறி​னார். விரை​வில் மகத்​தான திட்​டங்​கள் புது​வைக்கு வர உள்​ளன. பிரதமர் புது​வைக்கு வரும்​போது அந்த திட்​டங்​களுக்கு செயல்​வடிவம் கிடைக்​கும்.

2026 புத்​தாண்​டு, அமை​தி, செழிப்​பு, ஆரோக்​கியம், நம்​பிக்​கையை ஒவ்​வொரு இல்​லத்​துக்​கும் கொண்​டு​வந்து சேர்க்க இறைவனை வேண்​டு​கிறேன். இவ்​வாறு அவர் பேசி​னார். இந்​நிகழ்​வில் சட்​டப்​பேர​வைத் தலை​வர் செல்​வம், அமைச்​சர்​கள் லட்​சுமி நாராயணன், தேனீ ஜெயக்​கு​மார், திரு​முரு​கன், ஜான்​கு​மார் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

<div class="paragraphs"><p>புதுச்சேரி குமரகுருபள்ளத்தில் ரூ. 45.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 216 குடியிருப்புகளை பயனாளிகளுக்கு ஒப்படைத்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். உடன் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், ஜான்குமார் உள்ளிட்டோர். | படம்: எம்.சாம்ராஜ் |</p></div>
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: மோகினி அலங்காரத்தில் சேவை சாதித்த நம்பெருமாள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in