பிரிக்ஸ் மாநாட்டில் கூட்டுப் பிரகடனம்: பஹல்காம் தாக்குதல், போர், அதிக வரி விதிப்புக்குக் கண்டனம்

அடுத்த 20 ஆண்டுக்கான கொள்கையை வரையறுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்
டெல்லி பாரத் மண்டபத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. முதல்நாள் மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். படம்: பிடிஐ

டெல்லி பாரத் மண்டபத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. முதல்நாள் மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். படம்: பிடிஐ

Updated on
2 min read

புதுடெல்லி: பஹல்​காம் தாக்​குதல், போர், வரி விதிப்​புக்​குக் கண்​டனம் தெரி​வித்​து, பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் கூட்​டுப் பிரகடனம் வெளியிடப்பட்டது.

டெல்லி பாரத் மண்​டபத்​தில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்​கியது. இந்த மாநாட்​டுக்​குப் பிரதமர் மோடி தலைமை வகித்​தார். பிற்பகல் 2.35 மணிக்கு மூடிய அறை​யில் பிரிக்ஸ் தலை​வர்​கள் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். இதில் பல்​வேறு முக்​கிய முடிவு​கள் எடுக்​கப்​பட்​டன.

இதைத் தொடர்ந்து நடை​பெற்ற அமர்​வில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: பிரிக்ஸ் நாடு​களின் வளர்ச்​சிக்கு அடுத்த 20 ஆண்​டு​களுக்​கான விரி​வான கொள்​கைகளை வரையறுக்க வேண்​டும். செயற்கை நுண்​ணறி​வு, சைபர் பாது​காப்​பு, விண்​வெளி, உயிரி தொழில்​நுட்​பத்​தின் பலன்​கள், வளரும் நாடு​களுக்​குக் கிடைக்க வேண்​டும்.

சுதந்​திர​மான கடல்​வழிப் போக்​கு​வரத்து உறுதி செய்​யப்பட வேண்​டும். எண்​ணெய் கப்​பல், சரக்கு கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்​தக் கூடாது. மாலுமிகளின் உயிருக்கு அச்​சுறுத்​தலை ஏற்​படுத்​தக் கூடாது. குளோபல் சவுத் நாடு​கள் விதி​களைப் பின்​பற்​றும் நாடு​களாக இருக்​கக் கூடாது. அந்த விதி​களை நாமே உரு​வாக்க வேண்​டும். இரு நாட்டு எல்லையில் அமைதி நிலவுவது அவசியம். அப்போது இருதரப்பு உறவு வலுப்படும். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி பேசி​னார்.

பிரதமரைத் தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் பேசினர். பின்​னர் பிரிக்ஸ் மாநாட்​டில் உறுப்பு நாடு​களின் ஒரு​மித்த ஆதர​வுடன், ‘‘பிரிக்ஸ் புதுடெல்லி கூட்டு பிரகடனம்’’ நிறைவேற்​றப்​பட்​டது. அந்த 45 பக்க பிரகடனத்தில் கூறி​யிருப்​ப​தாவது: ‘மீள் திறன், புத்​தாக்​கம், நிலை​யான வளர்ச்​சியை உரு​வாக்​குதல்’ என்ற கருப்​பொருளின் அடிப்​படை​யில் டெல்லி பிரிக்ஸ் உச்சி மாநாடு நடை​பெறுகிறது. இந்த மாநாட்​டில் பிரிக்ஸ் உறுப்பு நாடு​களிடையே அரசி​யல்- பாது​காப்​பு, பொருளா​தா​ரம்-நிதிச் சேவை, கலாச்​சா​ரம் - மக்​கள் தொடர்பு ஆகிய 3 தூண்​களை வலுப்​படுத்த முடிவு எடுக்​கப்​பட்டு உள்​ளது.

மேற்கு ஆசிய போர் (அமெரிக்​கா, ஈரான்) மிகுந்த கவலை அளிக்​கிறது. இந்​தப் போருக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்​டும். முதல்​கட்​ட​மாக சம்​பந்​தப்​பட்ட நாடு​கள் பதற்​றத்​தைத் தணிக்​கும் நடவடிக்​கை​களில் ஈடுபட வேண்​டும். ஆக்​கப்​பூர்​வ​மான அமை​திப் பேச்​சு​வார்த்​தைகளை நடத்த வேண்​டும்.

நீண்ட கால​மாக நீடிக்​கும் இஸ்​ரேல் - பாலஸ்​தீன பிரச்​சினைக்​குச் சுமுக தீர்வு காணப்பட வேண்​டும். கிழக்கு ஜெருசலேமைத் தலை​மை​யிட​மாகக் கொண்டு பாலஸ்​தீனம் நாட்டை உரு​வாக்க வேண்​டும். லெப​னான், சிரியா மீதான தாக்​குதல் நிறுத்​தப்பட வேண்​டும். கடந்த 2025-ம் ஆண்டு ஏப்​ரல் 22-ம் ஆண்டு காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்​திய கொடூர தாக்​குதலில் 26 பேர் கொல்​லப்​பட்​டனர்.

இந்​தத் தீவிர​வாத தாக்​குதலை வன்​மை​யாகக் கண்​டிக்​கிறோம். தீவிர​வா​தி​களுக்கு அடைக்​கலம் அளிப்​போர், தீவிர​வா​தி​களுக்கு நிதி​யுதவி அளிப்​போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். தீவிர​வாதத்​துக்கு எதி​ராக பிரிக்ஸ் நாடு​கள் ஒன்​றிணைந்து செயல்​படும்.

அணு சக்தி நிலை​யங்​கள் மீது தாக்​குதல் நடத்​தக் கூடாது. ஐ.நா. பாது​காப்​புக் கவுன்​சில் விரிவுபடுத்​தப்பட வேண்​டும். பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் பெரிய அளவில் பங்காற்றுவதை சீனா ஆதரிக்கிறது. சர்​வ​தேச வர்த்​தகத்​தில் பல்​வேறு சவால்​கள் எழுந்​துள்​ளன. நியாயமற்ற வரி​வி​திப்பு நடை​முறை​களைக் கைவிட வேண்​டும். அனைத்து நாடு​களும் உலக வர்த்தக அமைப்​பின் விதி​களுக்கு உட்​பட்டு செயல்பட வேண்​டும். சர்​வ​தேச வர்த்​தகம், உலக விநி​யோகச் சங்​கி​லிக்​குப் பா​திப்பு ஏற்​படும் வகை​யில் எந்த நாடும் செயல்​படக் கூடாது. குளோபல்​ சவுத்​ நாடு​களின்​ பொருளா​தா​ர நலன்​களைக்​ கருத்​தில்​ கொள்​ளவேண்​டும்​. இவ்​வாறு கூட்​டுப்​ பிரகடனத்​தில்​ தெரி​விக்​கப்​பட்​டு உள்​ளது.

இந்தியாவின் வெற்றி: பிரிக்ஸ் கூட்டமைப்பில் எதிரெதிர் துருவங்களாகச் செயல்படும் பல்வேறு நாடுகள் உள்ளன.குறிப்பாக மேற்காசிய போரில் ஈரானுக்கும் சவுதிக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. மேலும் ரஷ்யா, உக்ரைன் இடையே நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடிக்கிறது. இவற்றை கருத்தில் கொண்டு எந்தவொரு நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் போர்களுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று கூட்டு பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்க அரசு அதிக வரிகளை விதித்து வருகிறது. இதை மறைமுகமாகக் குறிப்பிட்டு உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு நியாயமான வரிவிதிப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூட்டுப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டது இந்தியாவின் வெற்றியாகக் கருதப்படுகிறது.

மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாகப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர். அப்போது பிரதமர் மோடி கூறும்போது, “டெல்லி பிரிக்ஸ் மாநாடு குறித்து சீன தரப்பில் நேர்மறையான கருத்துகள் வெளியிடப்பட்டன. இதற்காகச் சீன அதிபருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்புக்குச் சீனா தலைமையேற்கிறது. இதற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும். இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறும்போது, “பிரிக்ஸ் கூட்டமைப்பின் வளர்ச்சிக்காகச் சீனாவும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இரு நாடுகளும் தங்களின் வளர்ச்சிப் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நீண்ட கால அடிப்படையில் இந்தியாவுடன் நல்லுறவைப் பேண சீனா விரும்புகிறது’’ என்று தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>டெல்லி பாரத் மண்டபத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. முதல்நாள் மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். படம்: பிடிஐ</p></div>
ஓடிவந்து அணைத்துக் கொண்ட விஜய்; ஆரத் தழுவி வரவேற்ற அஜித் - சில்வர்ஸ்டோன் ஹைலைட்ஸ்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in