தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை யாழ்ப்பாணத்தில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்திலுள்ள குறிகட்டுவான் இறங்குதுறை கடற்கரையில்  கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த இலங்கை மீனவர்கள்.

யாழ்ப்பாணத்திலுள்ள குறிகட்டுவான் இறங்குதுறை கடற்கரையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த இலங்கை மீனவர்கள்.

Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்கைக் கடற்​பரப்​பில் அத்​து​மீறி நுழைந்து மீன்​பிடிக்​கும் தமிழக மீனவர்​களைக் கட்​டுப்​படுத்த வலி​யுறுத்தி யாழ்ப்​பாணத்​தில் கருப்​புக்​கொடி ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

இலங்கை அரசால் தடை செய்​யப்​பட்ட இரட்டை மடி, ரோலர் மடி, சுருக்கு மடி மீன்​பிடி வலைகளைப் பயன்​படுத்தி இலங்கை கடல் பகு​தி​யில் மீன்​பிடி​யில் ஈடு​படும் தமிழக விசைப்​படகு மீனவர்​களைத் தடுத்து நிறுத்த வேண்​டும் என வலி​யுறுத்தி யாழ்ப்​பாணம் குறிகட்​டு​வான் இறங்​குதுறை கடற்​கைரை​யில் கருப்​புக்​கொடி ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

தமிழக மீனவர்​கள் மீது இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும் என வலி​யுறுத்தி கோரிக்கை மனு​வும் அந்​நாட்டு மீன்​வளத் துறை​யினரிடம் அளித்​தனர். அந்த மனு​வில் தெரி​வித்​துள்​ள​தாவது:

அத்​து​மீறி நுழைந்து... யாழ்​கு​டா, நெடுந்​தீவு, நயி​னாதீவு, வேலணை, எழு​வைத்​தீவு, அனலைத்​தீவு, பாக்​நீரிணை மற்​றும் மன்​னார் ஆகிய இலங்கைக் கடலோரப் பகு​தி​களில் தமிழக மீனவர்​கள் அத்​து​மீறி நுழைந்து மீன் பிடிப்​ப​தால் பாரம்​பரிய இலங்கை மீனவர்​கள் தங்​களின் வாழ்​வா​தா​ரத்தையும், கடல் வளத்தையும் இழந்து தவிக்​கின்​றனர்.

வலைகள் சேதம்: காரைக்​கால், நாகப்​பட்​டினம் மற்​றும் தொண்டி பகு​தி​களைச் சேர்ந்த தமிழக இழுவை மடி விசைப்​படகு​களால் இலங்கை மீனவர்​களின் நண்டு வலைகள் சேதப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இவ்வாறு கோரிக்கை மனுவில் இலங்கை மீனவர்கள் குறிப்​பிட்​டுள்​ளனர்.

<div class="paragraphs"><p>யாழ்ப்பாணத்திலுள்ள குறிகட்டுவான் இறங்குதுறை கடற்கரையில்  கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த இலங்கை மீனவர்கள்.</p></div>
“வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் தப்ப முடியாது” - புதிய செல்ஃபி வீடியோவில் பிரதமர் மோடி எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in