நீதித் துறையை பாதுகாக்க கோரி பாஜக, இந்து முன்னணி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

நீதித் துறையை பாதுகாக்க கோரி பாஜக, இந்து முன்னணி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

சென்னை: ​திருப்​பரங்​குன்​றம் மலை​யில் கார்த்​திகை தீபம் ஏற்​றும் விவ​காரத்​தில் உத்​தரவு பிறப்​பித்த உயர் நீதி​மன்ற நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் மீதான தனிப்​பட்ட விமர்​சனங்​களைக் கண்​டித்​தும், ஒட்​டுமொத்த நீதித் துறை​யின் செயல்​பாடு​களை பாது​காக்க வலி​யுறுத்​தி​யும் பாஜக, இந்து முன்​னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்​ளிட்ட இந்து அமைப்​பு​கள் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் ஆவிட் நுழை​வா​யில் பகு​தி​யில் நேற்று கண்டன ஆர்ப்​பாட்​டம் நடந்​தது.

இந்த ஆர்ப்​பாட்​டத்​துக்கு பாஜக வழக்​கறிஞரணி மாநிலத் தலை​வர் ஏ.குமரகுரு தலைமை வகித்​தார். பாஜக மாநில துணைத் தலை​வர் ஆர்​.சி.​பால்​க​னக​ராஜ், விஸ்வ ஹிந்து பரிஷத் வழக்​கறிஞரணி தேசிய இணை ஒருங்​கிணைப்​பாளர் சு.சீனி​வாசன், ஆர்எஸ்எஸ் அகில பாரத நிர்வாகி ரபுமனோகர், மயி​லாடு​துறை எஸ்​.​ராஜேந்​திரன் உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

நீதித் துறையை பாதுகாக்க கோரி பாஜக, இந்து முன்னணி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
வாராணசியில் மடங்கள், கோயில்களுக்கு வரி விதிக்க துறவிகள் கடும் எதிர்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in