பழநி கோயிலுக்கு 59 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நிர்வாக நிதியில் ரூ.58.54 கோடி செலவிட தடை

பழநி கோயிலுக்கு 59 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நிர்வாக நிதியில் ரூ.58.54 கோடி செலவிட தடை
Updated on
1 min read

மதுரை: பழநி கோயிலுக்கு வரும் பக்​தர்​களுக்கு அடிப்படை வசதி​கள் செய்ய 58.77 ஏக்​கர் நிலம் கையகப்படுத்​து​வதற்​கு, இந்து சமய அறநிலை​யத் துறை நிர்​வாக நிதியி​லிருந்து ரூ.58.54 கோடி செல​விட உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு இடைக்​கால தடை விதித்​துள்​ளது.

சென்னை மயி​லாப்​பூரைச் சேர்ந்த டி.ஆர்​.ரமேஷ், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: பழநி கோயிலுக்கு வரும் பக்​தர்​கள், பொது​மக்​களுக்கு அடிப்​படை வசதி​கள் ஏற்​படுத்த பழநி பகு​தி​யில் தனி​யாருக்​குச் சொந்​த​மான 58.77 ஏக்​கர் நிலம் கையகப்​படுத்​தப்பட உள்​ளது.

இதற்​கான செல​வுத் தொகை​யான ரூ.58.54 கோடியை அறநிலை​யத் துறை​யின் நிர்​வாக நிதியி​லிருந்து எடுக்க அனு​மதி வழங்கி அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டது. அறநிலை​யத் துறை நிர்​வாக நிதி என்​பது தமிழகம் முழு​வதும் உள்ள கோயில்​களி​லிருந்து ஆண்​டு​தோறும் வழங்​கப்​படும் நிதி​களின் தொகுப்​பாகும்.

இந்த நிதியை அறநிலை​யத் துறை ஆணை​யர், இணை ஆணை​யர், துணை ஆணை​யர், செயல் அலு​வலர்​கள் மற்​றும் ஊழியர்​களின் ஊதி​யம் மற்​றும் அறநிலை​யத் துறை அலு​வல​கங்​களின் செல​வுக்​குத்​தான் எடுக்க முடி​யும். இந்த நிதியை நிலம் வாங்​கு​வது உட்பட வேறு எதற்​காக​வும் பயன்​படுத்த முடி​யாது. அவ்​வாறு பயன்​படுத்​து​வது இந்து மக்​கள் மீது விதிக்​கப்​படும் வரி​யாக கருதப்​படும்.

எனவே, பழநி பகு​தி​யில் 58.77 ஏக்​கர் நிலம் கையகப்​படுத்த, அறநிலை​யத் துறை​யின் நிர்​வாக நிதியி​லிருந்து ரூ.58.54 கோடி எடுக்க அனு​மதி வழங்கி பிறப்​பிக்​கப்​பட்​டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்​டும். அது​வரை அந்த அரசாணையை செயல்​படுத்த இடைக்​கால தடை விதித்து உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிப​தி​கள் அனிதாசுமந்த், குமரப்​பன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. நீதிப​தி​கள், “பழநி கோயிலைச் சுற்​றி​ உள்ள நிலங்​களை கையகப்​படுத்​து​வதற்​காக, அறநிலை​யத்துறை​யின் நிர்​வாக நிதி​யைப் பயன்​படுத்த தடை விதிக்​கப்​படு​கிறது. இந்த மனு, ஏற்​கெனவே இது​போன்ற வழக்கு நிலு​வை​யில் உள்ள அமர்வு விசா​ரணைக்கு மாற்​றப்​படு​கிறது” என்று உத்​தர​விட்​டனர்​.

பழநி கோயிலுக்கு 59 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நிர்வாக நிதியில் ரூ.58.54 கோடி செலவிட தடை
செங்கோட்டையன் வெளியேறியது அதிமுகவுக்கு பின்னடைவு: திருமாவளவன் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in