நீதிமன்றத்தில் சரணடைந்த செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு முன்ஜாமீன்

செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் | கோப்புப் படம் 

செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் | கோப்புப் படம் 

Updated on
1 min read

சென்னை: தவெக எம்எல்ஏ-விடம் கு​திரை பேரம் நடத்​தி​ய​தாக பதி​யப்​பட்ட வழக்​கில், நீதிமன்றத்தில் சரணடைந்த முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்குமார் முன்​ஜாமீன் பெற்​றார்.

தவெக ஆட்​சியை கவிழ்க்​கும் நோக்​கில் ஊத்​தங்​கரை தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா​விடம் குதிரை பேரத்​தில் ஈடு​பட்​ட​தாக திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் பலரை கைது செய்​துள்​ளனர். இந்த வழக்​கில்குற்​றம் சாட்​டப்​பட்ட செந்​தில் பாலாஜி ,அவரது சகோ​தரர் அசோக்​கு​மாருக்கு சென்னை உயர்நீதி​மன்​றம் நிபந்​தனை முன்​ஜாமீன் வழங்​கி​யிருந்​தது.

அதன்​படி செந்​தில்​பாலாஜி கடந்த 24 அன்று சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் சரண் அடைந்து முன்​ஜாமீன் பெற்றார். அவரது சகோ​தர​ர் அசோக்​கு​மார் நேற்று இதே நீதி​மன்​றத்​தில் சரண் அடைந்து பிணைத் ​தொகையை செலுத்​தி​னார்.

அதையடுத்து நீதிப​தி எஸ்.கார்த்திகேயன், உயர் நீதி​மன்​ற நிபந்​தனை​ப்படி காலை, மாலை என இருவேளை​களி​லும் திரு​வல்​லிக்கேணிபோலீ​ஸார் முன்​ ஆஜராக அசோக்​கு​மாரை அறி​வுறுத்​தி முன்​ஜாமீன்​ வழங்​கி​னார்​.

<div class="paragraphs"><p>செந்தில் பாலாஜி சகோதரர்&nbsp;அசோக்குமார் | கோப்புப் படம்&nbsp;</p></div>
கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து - முழு விவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in