திருப்பரங்குன்றம் தீபத் தூண் யாருக்கு சொந்தம்? - உயர் நீதிமன்றத்தில் வக்பு வாரியம் தரப்பில் வாதம்

திருப்பரங்குன்றம் தீபத் தூண் யாருக்கு சொந்தம்? - உயர் நீதிமன்றத்தில் வக்பு வாரியம் தரப்பில் வாதம்
Updated on
2 min read

மதுரை: திருப்பரங்குன்றம் தீபத் தூண் சிக்​கந்​தர் தர்கா​வுக்கு சொந்​த​மானது என்று வக்பு வாரி​ய வழக்கறிஞர், உயர் நீதி​மன்​ற மதுரை அமர்வில் வாதாடினார். திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்​று​மாறு நீதிபதி ஜி.ஆர்​. சு​வாமி​நாதன் பிறப்​பித்த உத்​தர​வுக்கு எதி​ராக தமிழக அரசு, அறநிலை​யத் துறை, கோயில் நிர்​வாகம், தர்கா நிர்​வாகம் உட்பட 20 மேல்​முறை​யீட்டு மனுக்​களும், நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு எதி​ராக 6 மேல்​முறை​யீடு மனுக்​களும் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

இந்த மனுக்​கள் மீதான விசா​ரணை நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ராமகிருஷ்ணன் அமர்​வில் நேற்று நடை​பெற்​றது. வக்பு வாரிய வழக்​கறிஞர் முபின் வாதிடும்​போது, “மலை உச்​சி​யில் உள்ள தூணில் தீபமேற்​றும் பழக்​கம் இருந்​த​தில்​லை. நெல்​லித்​தோப்பு மற்​றும் அது சார்ந்த பாதைகள், அவ்​விடத்​துக்குச் செல்​லும் படிக்​கட்​டு​கள் தர்கா நிலங்​கள் முஸ்​லிம்​களுக்​குச் சொந்​த​மானவை என நீதி​மன்ற உத்​தர​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தொல்​லியல் துறை​யிடம் தனி நீதிபதி கருத்து கேட்​க​வில்​லை” என்​றார். இதையடுத்து நீதிப​தி​கள், தர்கா​வுக்கு சொந்​த​மான நிலங்​கள் தொடர்​பான ஆவணங்​களை தாக்​கல் செய்​யு​மாறு உத்​தர​விட்​டனர். மதுரை ஆட்​சி​யர், காவல் ஆணையர் தரப்பு வழக்​கறிஞர் விகாஸ்​சிங் வாதிடும்​போது, “தனி நீதிபதி தீர்ப்​பால் திருப்​பரங்​குன்​றத்​தில் பதற்​ற​மான சூழல் ஏற்​பட்​டது.

1862, 1960-ம் ஆண்​டு​களில் பிரச்​சினை எழுந்​த​போது, தீபம் ஏற்ற அனு​மதி கொடுக்​க​வில்​லை. தர்கா அரு​கில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று புதி​தாக உத்​தர​விட்​டு, அதற்கு போலீஸ் பாது​காப்பு வழங்க வேண்​டும் என உத்​தர​விடு​வது ஏற்​புடையதல்ல. தர்கா​வுக்​குச் சொந்​த​மான பாதை வழி​யாக சென்​று​தான் தீபம் ஏற்ற முடி​யும். இதனால், சட்​டம்​-ஒழுங்கு பிரச்​சினை ஏற்​படும்.

தனி நீதிப​திக்கு மதம் சார்ந்த விவ​காரங்​களில் முடி​வெடுக்க அதி​காரம் இல்​லை. அவரது உத்​தர​வால் பொது அமைதி பாதிக்​கப்​படும் சூழல் உரு​வாகி​யுள்​ளது.

தனி நீதிப​தி, தான் எடுத்​துக்​கொண்ட சத்​தியப் பிர​மாணத்​துக்கு எதி​ராக செயல்​பட்​டுள்​ளார். அவருக்கு வரும் தேர்​தலில் போட்​டி​யிடு​வதற்​கான வாய்ப்​புள்​ளது” என்​றார். இதற்கு மனு​தா​ரர் தரப்​பில் ஆட்​சேபம் தெரிவிக்​கப்​பட்​டது.

மனு​தா​ரர்​கள் வழக்​கறிஞர்​கள் வாதிடும்​போது, “தனி நீதிபதி ஆய்வு செய்த பின்​னரே, தீபம் ஏற்ற உத்​தர​விட்​டுள்​ளார். தர்​கா​வில் இருந்து 15 மீட்​டருக்கு அப்​பால்​தான் தூண் உள்​ளது” என்​றார். அப்​போது நீதிப​தி​கள், “தூண் எவ்​வளவு தொலை​வில் உள்​ளது என்​பதை முதலில் தெளிவுபடுத்​துங்​கள்.

மலை உச்​சிக்குச் செல்ல எத்​தனை பாதைகள் உள்​ளன. அவற்​றில் பயன்​பாட்​டில் உள்​ளவை எத்​தனை, அரசு மற்றும் இந்து சமய அறநிலை​யத் துறை தரப்​பில், அது சர்வே தூண் என்​றும், சமணர் கால கல் தூண் என்​றும் கூறப்​படு​கிறது.

அரசு, அறநிலை​யத் துறை, தர்​கா, காவல் துறை​யின் ஆட்​சேபங்​களை தனி நீதிபதி கருத்​தில் கொண்​டா​ரா, 1994 தீர்ப்​பில் மலை உச்​சி​யில் உள்ள தூண் எனக் குறிப்​பிடப்​பட்​டுள்​ள​தா, மாற்று இடத்​தைப் பரிசீலிக்​கத்​தானே கூறப்​பட்​டுள்​ளது, பிறகு தீபத்​தூணில் தீபமேற்ற வேண்​டும் என கோர முடி​யு​மா” என்று கேள்வி எழுப்​பினர்.

மனு​தா​ரர்​கள் தரப்​பில், “தனி நீதிப​தி​யின் உத்​தரவை நிறைவேற்ற வேண்​டியது காவல் துறை​யின் கடமை. வழக்கை விரை​வில் விசா​ரித்து முடிக்க வேண்​டும்” என்று கூறப்​பட்​டது. இதையடுத்​து, விசா​ரணையை டிச. 17-ம் தேதிக்கு (இன்​று) தள்​ளி​வைத்து நீதிப​தி​கள் உத்​தரவிட்​டனர்.

தலைமைச் செயலர், ஏடிஜிபிக்கு விலக்கு அளிக்க மறுப்பு: திருப்பரங்குன்றம் தீப வழக்கு உத்தரவை நிறைவேற்றாததால் மதுரை ஆட்சியர், காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, விசாரணையை டிச. 17-க்கு (இன்று) தள்ளி வைத்த தனி நீதிபதி, தாமாக முன்வந்து மத்திய உள்துறைச் செயலரை எதிர் மனுதாரராகச் சேர்த்தும், தமிழக தலைமைச் செயலர், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராகவும் உத்தரவிட்டார்.

இதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயர் நீதிமன்ற அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, தலைமைச் செயலர், ஏடிஜிபி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார். அதற்கு நீதிபதிகள், “தற்போதைய சூழலில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (இன்று) தொடரும்" என்று உத்தரவிட்டனர்.

திருப்பரங்குன்றம் தீபத் தூண் யாருக்கு சொந்தம்? - உயர் நீதிமன்றத்தில் வக்பு வாரியம் தரப்பில் வாதம்
பொங்கலுக்குப் பிறகு விருப்ப மனு: பிரேமலதா அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in