சென்னையில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு மாரத்தான்: அர்ச்சனா பட்நாயக் தொடங்கிவைத்தார்

இந்திய வாக்காளர் சங்கம், சென்னை மாநகராட்சி சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான்-2026 நேப்பியர் பாலம் அருகே நேற்று நடைபெற்றது. இதை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்திய வாக்காளர் சங்கம், சென்னை மாநகராட்சி சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான்-2026 நேப்பியர் பாலம் அருகே நேற்று நடைபெற்றது. இதை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி,100 சதவீதம் வாக்குப்பதிவு நடை​பெறு​வது குறித்த விழிப்​புணர்வு மாரத்​தானை தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தொடங்​கி ​வைத்​தார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் பொதுத்​தேர்​தலை முன்​னிட்​டு, சென்னை மாவட்​டத்​துக்கு உட்​பட்ட 16 தொகு​தி​களி​லும் நேர்​மை​யான மற்​றும் 100 சதவீதம் வாக்​களிப்​ப​தன் அவசி​யம் குறித்து விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில் மாநக​ராட்சி சார்​பில், தமிழகத்​தின் பாரம்​பரிய விளை​யாட்டு மற்​றும் நாட்​டுப்​புறக் கலைநிகழ்ச்​சிகள், அனைத்து பேருந்து நிறுத்​தங்​களி​லும் தேர்​தல் குறித்த விளம்​பரங்​கள், விநாடி-​வி​னா, பேருந்​துகளின் வாயி​லாக விழிப்​புணர்வு ஏற்​படுத்​துதல், திரையரங்​கு​கள், வானொலி மற்​றும் சமூக ஊடகங்​களில் விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில் தேர்​தல் விழிப்​புணர்​வுப் பாடல்​கள் உள்​ளிட்ட பல்​வகை விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்டு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

இதன் தொடர்ச்​சி​யாக, மாநக​ராட்சி மற்​றும் இந்​திய வாக்​காளர் சங்​கம் இணைந்​து, நேர்​மை​யான மற்​றும் 100 சதவீத வாக்​குப்​ப​திவு குறித்து வாக்​காளர்​களிடையே விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வித​மாக 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்ற மாபெரும் வாக்​காளர் விழிப்​புணர்வு மாரத்​தான் ஓட்​டம் சென்னை நேப்​பியர் பாலம் அரு​கில் நேற்று நடை​பெற்​றது.

இதில் தமிழக தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் கலந்​து​கொண்டு மாரத்​தான் ஓட்​டத்தை கொடியசைத்​துத் தொடங்கி வைத்​தார். இந்த மாரத்​தான் ஓட்​ட​ம் நேப்​பியர் பாலத்​தில் தொடங்கி காம​ராஜர் சாலை வழி​யாக விவே​கானந்​தர் இல்​லம் வரை சென்று மீண்​டும் நேப்​பியர் பாலம் வந்​தடைந்​தது.

மாரத்​தான் ஓட்​டத்​தில் பங்​கேற்ற அனை​வருக்​கும் பதக்​கம்,பாராட்​டுச் சான்​றிதழ் வழங்​கப்​பட்​டது. இந்​நிகழ்ச்​சி​யில் அர்ச்​சனா பட்​நாயக் பேசும்​போது, ``அனை​வரும் இந்த தேர்​தலில் 100 சதவீதம் வாக்​களித்து ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்​டும். வாக்​காளர்​கள் எளி​தில் வாக்​களிக்க வாக்​குச்​சாவடிகளில் அனைத்து ஏற்​பாடு​களும் செய்​யப்​பட்​டுள்​ளன'' என்​றார்.

வாக்​குச்​சாவடியில் வசதிகள்

மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் பேசும்​போது, ``வாக்​குச்​சாவடிகளில் குடிநீர், கழிப்​பறை, நிழற்​பந்​தல் வசதிகள் உள்​ளிட்​டவை செய்​யப்​பட்​டுள்​ளன'' என்​றார்.

இவ்​விழா​வில், இணை தலை​மைத் தேர்​தல் அதி​காரி ஸ்ருதஞ்​ஜெய் நாராயணன், கூடு​தல் மாவட்ட தேர்​தல் அதி​காரி கட்டா ரவி தேஜா, இந்​திய வாக்​காளர் சங்​க நிறு​வனத்​ தலை​வர்​ இளந்​திரு​மாறன்​ உள்​ளிட்​ட பலர்​ கலந்​து கொண்​டனர்​.

<div class="paragraphs"><p>இந்திய வாக்காளர் சங்கம், சென்னை மாநகராட்சி சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான்-2026 நேப்பியர் பாலம் அருகே நேற்று நடைபெற்றது. இதை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p></div>
“செந்தில் பாலாஜி பெறப் போகும் வெற்றிக்கு சாட்சி இதுதான்...” - கமல்ஹாசன் பிரச்சாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in