ஒருங்கிணைந்த போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கை: கேரளாவில் 72 மணி நேரத்தில் 1,000 பேர் கைது

ஒருங்கிணைந்த போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கை: கேரளாவில் 72 மணி நேரத்தில் 1,000 பேர் கைது
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரளா​வில் ஒருங்​கிணைந்த போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்​கை​யின்போது 72 மணி நேரத்​தில் 1,500-க்​கும் மேற்​பட்ட வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் கைது செய்​யப்​பட்​டனர்.

கேரளா​வில் பள்ளி, கல்லூரி வளாகங்களை போதைப் பொருள் இல்லாத பகுதிகளாக மாற்ற புதிய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, புதிய கல்வி ஆண்டு தொடங்​கு​வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்​பு, பள்​ளி, கல்​லூரிப் பகு​தி​களில் போதைப்​பொருள் கடத்​து​வோரை எதிர்​பா​ராத நேரத்​தில் பிடிப்​ப​தற்​கான ஒரு உத்​தியை அமைச்​சர் ரமேஷ் சென்​னிதலா இறுதி செய்​தார்.

இதன்படி,'ஆபரேஷன் தூஃ​பான்' என்ற பெயரில் ஒருங்​கிணைந்த போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கை தொடங்​கப்​பட்​டுள்​ளது. இதில் வெறும் 72 மணி நேரத்​தில் 1,500-க்​கும் மேற்​பட்ட வழக்குகளை பதிவு செய்​தனர். ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோரை கைது செய்​துள்​ளனர். மேலும் கஞ்சா மற்​றும் போதைப் பொருட்கள் கணிச​மான அளவில் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

ஆபரேஷன் தூஃ​பான் தொடர்​பான பிரச்​சா​ரம் திரு​வனந்​த​புரத்​தில் உள்ள காட்​டன் ஹில் பெண்​கள் மேல் ​நிலைப் பள்​ளி​யில் தொடங்கி வைக்​கப்​பட்​டது. இந்த நிகழ்​வில் மாணவர்​கள், பெற்றோர்​கள், போலீஸ் அதி​காரி​கள் மற்​றும் பொது​மக்​கள் பெருமள​வில் பங்​கேற்​றனர். இந்த அதிரடி நடவடிக்​கைக்கு ஆதரவான பிரச்​சா​ரங்​கள் சமூக ஊடகத் தளங்​களில் வைரலாக பரவின. களத்​தி​லும் இணை​யத்​தி​லும், இந்த நடவடிக்கை முன்னெப்​போதும் இல்​லாத வகை​யில் பொது​மக்​களின் ஆதரவைப் பெற்​றது.

காவல்​துறை அதி​காரி​கள் முறை​யான அறி​விப்​பு​களை தாண்டி சமூக ஊடகப் பக்​கங்​கள் மூலம் பொது ​மக்​களின் உதவியை கோரினர். உள்​ளூர் போதைப்​பொருள் வியா​பாரி​களைப் பற்​றிய தகவல்​களுக்​காக மொபைல் மற்​றும் வாட்​ஸ்​அப் எண்​கள் அறிவிக்கப்​பட்​டன. பறி​முதல் செய்​யப்​பட்ட ஸ்மார்ட் போன்​களை ஆய்வு செய்​ததன் மூலம் டெல்​லி​யில் சா​முவேல், பெங்​களூரு​வில் எல்​சினா ஆகிய 2 முக்​கிய வெளி​நாட்டு போதைப்​பொருள்​ கடத்தல்​கார்​களும்​ கைது செய்​யப்​பட்​டனர்​.

ஒருங்கிணைந்த போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கை: கேரளாவில் 72 மணி நேரத்தில் 1,000 பேர் கைது
தமிழக மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி போட்டியின்றி தேர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in