அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதித்துறை நிர்வாகத்தை தமிழக காவல்துறை சீர்குலைத்து விட்டதாக நீதிபதிகள் கருத்து

தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைப்பு
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதித்துறை நிர்வாகத்தை தமிழக காவல்துறை சீர்குலைத்து விட்டதாக நீதிபதிகள் கருத்து
Updated on
1 min read

சென்னை: அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்​கொடுமை தொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரித்த வழக்​கின் தீர்ப்பை தேதி குறிப்​பி​டா​மல் தள்ளி வைத்​துள்ள நீதிபதிகள், இந்த விவ​காரத்​தில் நீதித்​துறை நிர்​வாகத்தை தமிழக காவல்​துறை ஒட்​டு மொத்​த​மாக சீர்​குலைத்​து​விட்​ட​தாக கருத்து தெரி​வித்​துள்​ளனர்.

சென்னை அண்​ணா நகரை சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட சம்​பவம் தொடர்​பாக புகார் அளிக்​கச் சென்ற பெற்​றோரை அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீ​ஸார் தாக்​கிய​தாக புகார் கூறப்​பட்​டது.

இது தொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரித்து வரு​கிறது. இந்த வழக்​கில் இழப்​பீடு வழங்​கக் கோரி​யும், சம்​பந்​தப்​பட்ட போலீஸ் அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி​யும் சிறுமி​யின் தாயாரும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்​ளார்.

இந்த வழக்கை நேற்று முன்​தினம் விசா​ரித்த நீதிபதிகள் பி.வேல்​முரு​கன், எம்​.ஜோ​தி ​ராமன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, போக்சோ வழக்​கின் விதி​முறை​களை மீறிய காவல்​துறை அதி​காரி​கள் மீது இது​வரை எடுக்​கப்​பட்ட நடவடிக்கை குறித்​தும், அவர்​கள் மீதான விசா​ரணைநிலை குறித்​தும் அறிக்கை தாக்​கல் செய்ய காவல்​ துறைக்கு உத்​தர​விட்​டிருந்​தனர்.

அதன்​படி, இந்த வழக்கு இதே அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் ஜெ.ர​வீந்​திரன் ஆஜராகி தாக்​கல் செய்த அறிக்​கை​யில், சம்​பந்​தப்​பட்ட காவல்​துறை அதி​காரி​கள் மீது துறை ரீதி​யாக விசா​ரணை நடத்த ஜன.4-ம் தேதி அதி​காரி ஒரு​வர் நியமிக்​கப்​பட்​டுள்​ளார் என்​றும், இந்த வழக்​கில் தொடர்​புடைய காவல்​துறை அதி​காரி​கள் மற்​றும் சிறுமி​யின் பெற்​றோரிடம் ஆரம்​பகட்ட விசா​ரணை நடத்​தப்​பட்​டுள்​ளது என்​றும், வழக்​கில் யாரை​யும் காப்​பாற்​றும் எண்​ணம் அரசுக்கு இல்லை என்​றும் விளக்​கம் அளித்​தார்.

அப்​போது குறுக்​கிட்ட நீதிபதிகள், “இந்த சம்​பவம் தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் கடந்த 2024 அக்​டோபரில் தாமாக முன்​வந்து விசா​ரணைக்கு எடுத்​து, தவறு இழைத்த அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்க உத்​தர​விட்​டது. ஆனால். ஒன்​றரை ஆண்​டு​களுக்கு பிறகு கடந்த 4-ம் தேதி​தான் விசா​ரணை அதி​காரி நியமிக்​கப்​பட்​டுள்​ள​தாக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது” எனகடும் கண்​டனம் தெரி​வித்​தனர்.

மேலும், நீதித்​துறை நிர்​வாகத்தை தமிழக காவல்​துறை ஒட்​டுமொத்​த​மாக சீர்​குலைத்து விட்​டது என்​றும், காவல்​ துறை நினைத்​தால் ஒரே வாரத்​தில் விசா​ரணையை நடத்தி முடிக்க முடி​யும். இழுத்​தடிக்க வேண்​டுமென நினைத்​தால் விசா​ரணையை 10 ஆண்​டு​கள் வரைக்​கூட இழுத்​தடிக்க முடி​யும் என அதிருப்தி தெரி​வித்த நீதிபதிகள், இந்த வழக்​கில் இறுதி உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும்​ என கூறி தீர்ப்​பை தேதி குறிப்​பி​டா​மல்​ தள்​ளி​வைத்​துள்​ளனர்​.

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதித்துறை நிர்வாகத்தை தமிழக காவல்துறை சீர்குலைத்து விட்டதாக நீதிபதிகள் கருத்து
மகாத்மா காந்தியின் 79-வது நினைவு தினம்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் மரியாதை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in