போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்

அன்புமணி

அன்புமணி

Updated on
1 min read

சென்னை: போக்​கு​வரத்​துக் கழகங்​களுக்கு 3,274 ஓட்​டுநர், நடத்​துநர்​களை நியமிப்​ப​தற்​கான போட்​டித் தேர்வு முடிவு​களை வெளி​யிட பாமக தலைவர் அன்​புமணி வலி​யுறுத்தியுள்​ளார்.

இதுதொடர்​பாக மேலும் அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: இந்தப்போட்​டித் தேர்​வு​கள் நடத்​தப்​பட்டு 7 மாதங்களாகும் நிலை​யில், இது​வரை அதற்​கான முடிவு​கள் வெளி​யிடப்​பட​வில்​லை. தாமதப்​படுத்தி வரு​வது கண்​டிக்​கத்​தக்​கது.

எனவே முடிவுகளை வெளியிட்டு ஆள்​தேர்வு நடை​முறை​களை விரைவுபடுத்​தி, தகு​தி​யானவர்​களுக்கு பணி ஆணை வழங்க வேண்​டும். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in