6 புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

6 புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தேசிய மருத்துவ ஆணை​யம் தடையை நீக்​கி​யுள்​ள​தால், 6 புதிய மருத்​துவ கல்​லூரி​களை தொடங்க வேண்​டும் என்​று, பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: இந்​தி​யா​வில் எந்த மாநில​மாக இருந்​தா​லும் 10 லட்​சம் மக்​கள் தொகைக்கு அதி​கபட்​ச​மாக 100 மருத்​துவ மாணவர் சேர்க்கை இடங்​கள் மட்​டுமே அனு​ம​திக்​கப்​படும் என்​றும், அதற்​கும் கூடு​தலான மருத்​துவ மாணவர் சேர்க்கை இடங்​கள் உள்ள மாநிலங்​களில் புதிய மருத்​து​வக் கல்​லூரி​களோ, மருத்​துவ மாணவர் சேர்க்கை இடங்​களோ அனு​ம​திக்​கப்​ப​டாது என்றும் தேசிய மருத்​துவ ஆணை​யம் கடந்த 2023-ம் ஆண்டு ஆக.6-ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளி​யிட்​டது.

அதன்​படி, தமிழகத்​தின் மக்​கள்​தொகை அடிப்​படை​யில், இன்​றைய நிலை​யில், 7,731 எம்​பிபிஎஸ் மாணவர் சேர்க்கை இடங்​கள் மட்​டுமே இருக்க முடி​யும். ஆனால், ஏற்​கெ​னவே தமிழகத்​தில் அரசு - தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் 12,650 எம்​பிபிஎஸ் மாணவர் சேர்க்கை இடங்​கள் இருப்​ப​தால் புதிய மருத்​து​வக் கல்​லூரி​களை தொடங்​க​வும் முடி​யாது.

ஏற்​கெ​னவே தொடங்​கப்​பட்ட மருத்​துவ கல்​லூரி​களில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்​களை அதி​கரிக்​க​வும் முடி​யாத நிலை உரு​வானது. இந்​நிலை​யில், புதிய விதி​முறை​களை கைவிடு​வ​தாக கடந்த கடந்த மாதம் 27-ம் தேதி வெளி​யிட்ட அறிவிக்​கை​யில் தேசிய மருத்​துவ ஆணை​யம் தெரி​வித்​திருக்​கிறது. இது மிக​வும் வரவேற்​கப்பட வேண்​டிய நடவடிக்​கை​யாகும்.

தேசிய மருத்​துவ ஆணை​யம் வெளி​யிட்​டுள்ள புதிய அறிவிக்​கை​யின்​படி, தமிழகத்​தில் இது​வரை அரசு மருத்​து​வக் கல்​லூரி​கள் தொடங்​கப்​ப​டாத காஞ்​சிபுரம், ராணிப்​பேட்​டை, திருப்​பத்​தூர், மயி​லாடு​துறை, பெரம்​பலூர், தென்​காசி ஆகிய 6 மாவட்​டங்​களி​லும் அரசு மருத்​து​வக் கல்​லூரி​களை தொடங்​கு​வதற்கு எந்த தடை​யும் இல்​லை.

புதிய மருத்​துவ கல்​லூரி​களை தொடங்​கு​வதற்​கான தடை நீக்​கப்​பட்டு விட்ட நிலை​யில், 6 மாவட்​டங்​களி​லும் அரசு மருத்​துவ கல்​லூரி​கள் தொடங்​கப்பட வேண்​டும். அடுத்த சில நாள்​களில் தமிழகத்​தில் புதிய அரசு அமைக்​கப்​பட்​ட​வுடன் இதற்​கான நடவடிக்​கையை பாமக மேற்​கொள்​ளும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

6 புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை ரயில்வே கோட்டம் சரக்கு போக்குவரத்து மூலமாக ரூ.1,289 கோடி வருவாய் ஈட்டி சாதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in