அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியிடங்களை நிரப்ப பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியிடங்களை நிரப்ப பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: பாமக தலை​வர் அன்​புமணி நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மருத்​து​வக் கல்​லூரி உள்​ளிட்ட கல்​லூரி​களில் முக்​கி​யத்​து​வம் வாய்ந்த பல பதவி​கள் காலி​யாக உள்ள நிலை​யில், அப்​பணி​களை கைப்​பற்ற ஆட்​சி​யாளர்​களுக்கு நெருக்​க​மானவர்​கள் துடிக்​கின்​றனர்.

கலந்​தாய்வு நடத்​தப்​பட்ட பணி​களுக்​கும் இடமாறு​தல் ஆணை வழங்​கப்​ப​டாததற்​கும் இது தான் காரணம் என்​றும் கூறப்​படு​கிறது. தேசிய மருத்​துவ ஆணை​யத்​திடம் பெற்ற காலக்​கெடு​வுக்​குள் காலி​யிடங்​கள் நிரப்​பட​வில்லை என்​றால், அரசு மருத்​து​வக் கல்​லூரி​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் நிலை உரு​வாகும். எனவே, பேராசிரியர்​களுக்கு உடனடி​யாக பணி​யிட மாறு​தல் ஆணையை வழங்க வேண்​டும். இவ்​வாறு அன்​புமணி வலி​யுறுத்​தியுள்​ளார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in