புதுச்சேரியில் டிச.5-ல் விஜய் ரோடு ஷோ - எதிர்ப்புக்கு மத்தியில் அனுமதி கிட்டுமா?

புதுச்சேரியில் டிச.5-ல் விஜய் ரோடு ஷோ - எதிர்ப்புக்கு மத்தியில் அனுமதி கிட்டுமா?
Updated on
2 min read

புதுச்சேரி: தமிழகத்தில் அனுமதி கிடைக்காத நிலையில், புதுச்சேரியில் டிசம்பர் 5-ல் விஜய்யின் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்துக்கு அனுமதி கோரி டிஜிபியிடம் தவெகவினர் மனு அளித்தனர்.

தமிழகம், புதுவையில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தவெக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பிரச்சாரம் நடத்துவதற்காக அட்டவணையும் வெளியிட்டு பிரச்சாரம் நடத்தி வந்தார். கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி நடந்த பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தாமல் இருந்தார்.

இதனிடையே, கூட்ட நெரிசலை தவிர்க்க மக்கள் பாதுகாப்பு படை என்ற தொண்டர் படையை தவெக உருவாக்கியது. இவர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சேலத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தவெக சார்பில் அனுமதி கேட்டனர். ஆனால் இதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அரங்கத்தில் அண்மையில் கட்சி நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேசினார். மக்கள் சந்திப்புக்கு அனுமதி கிடைத்தவுடன் வெளியே வருவேன் என்று அவர் கூறியிருந்தார். தமிழகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கிடைக்காத நிலையில், புதுவை மாநிலத்தில் தவெக தலைவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளார். அதன்படி வரும் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தவெக தலைவர் விஜய் முடிவு எடுத்தார்.

விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி தராதீர்’ - இதனிடையே, விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி தராதீர் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் டிஜிபிக்கு மனு அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக டிஜிபிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் இளங்கோ அனுப்பிய மனுவில், ‘புதுச்சேரியில் நடிகர் விஜய் ரோடு ஷோ நடத்த தவெகவினர் மனு தந்துள்ளனர்.

கரூரில் விஜய் நடத்திய ரோடு ஷோவில் 41 பேர் இறந்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு புதுச்சேரி போலீஸார் ரோடு ஷோவுக்கு அனுமதி தரக்கூடாது. ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மீறி அனுமதி தந்தால் போராட்டம் நடத்துவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் சமூக ஆர்வலர் அசோக்ராஜா டிஜிபி அலுவலகத்தில் அளித்த மனுவில், ‘கரூரில் நடந்த விஜய் பிரச்சார நிகழ்வில் 41 பேர் உயிரிழந்தனர்.

இதற்காக போலீஸ் டிஜிபி அலுவலகத்துக்கு இன்று தவெகவினர் வந்தனர். அங்கு டிஜிபி ஷாலினிசிங் இல்லாததால், அவரது அலுவலகத்தில் அனுமதி கேட்டு, புதுவை மாநில தவெக நிர்வாகி புதியவன் கையெழுத்திட்ட மனு நேற்று அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ‘தவெக தலைவர் விஜய் சாலை மார்க்கமாக காலாப்பட்டில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர்டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளகுப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் வழியாக வந்து மக்களை சந்திக்க உள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது உப்பளம் சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகில் ஒலிப்பெருக்கி மூலம் உரையாற்ற உள்ளார். எனவே, இந்த நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

டிசம்பர் 5-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. தொடர்ந்து தமிழகத்தின் கடலூருக்கு செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு புதுவை போலீஸாரின் அனுமதி கிடைக்குமா என்பது விரைவில் தெரியவரும்.

இந்நிலையில் தவெகவினர், சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வர் அறையில் முதல்வர் ரங்கசாமியை இன்று மாலை சந்தித்து ரோடு ஷோவுக்கு அனுமதிக் கோரும் கடிதத்தை அளித்தனர்.

பொது இடங்களில் குறிப்பாக பிரதான சாலைகளில் பெரும் கூட்டத்தை திரட்டும் ரோடு ஷோ போன்ற நிகழ்வுகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை கரூர் நிகழ்வு தெளிவாக காட்டியது.

புதுச்சேரியில் பிரதான சாலைகள், கிழக்கு கடற்கரைச்சாலை பகுதிகள், அன்றாட போக்குவரத்து நெரிசலால் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஏராளமான ரசிகர்கள் திரளும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கினால், சிறிய ஊரான புதுச்சேரியிலும் பாதிப்பு நிகழ வாய்ப்புள்ளது.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், பொது மக்களின் அன்றாட பயணம், மாணவர்கள், முதியோர், நோயாளிகள் ஆகியோருக்கும் இடையூறு ஏற்படும்.

மக்களின் உயிருக்கும் பாதுகாப்பும் முன்னுரிமை அளித்து விஜய்யின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு புதுச்சேரியில் அனுமதி தரவேண்டாம். முறையான ஏற்பாடுகளுடன் மைதானம் அல்லது மூடப்பட்ட இடத்தில் நடத்த அனுமதி தரலாம். பொது சாலைகளில் ரோடு ஷோ நடத்துவதை தவிர்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரியில் டிச.5-ல் விஜய் ரோடு ஷோ - எதிர்ப்புக்கு மத்தியில் அனுமதி கிட்டுமா?
வலுக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வட தமிழகத்தில் நவ.29, 30-ல் அதி கனமழை எச்சரிக்கை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in