Published : 05 Oct 2017 07:58 AM
Last Updated : 05 Oct 2017 07:58 AM

பண்ணை வீட்டில் திருட முயன்ற மர்ம நபர் கொலை

பெங்களூரைச் சேர்ந்தவர் உஷாப்பிரியன்(75). இவருக்கு சுங்குவார்சத்திரம் அருகே பொடவூரில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்தப் பண்ணை வீட்டை அதே பகுதியைச் சேர்ந்த சரவணன்(45), அவரது மனைவி யமுனா(38) பராமரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் 3 பேர் கொண்ட கும்பல் இந்தப் பண்ணை வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றுள்ளனர். தடுக்க முயன்ற சரவணன், யமுனா ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி வழியாகச் சென்ற சிலர் ஓடி வந்தனர். உடனே கொள்ளையர்களில் இருவர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார்.

மக்கள் சரமாரியாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு சுமார் 45 வயது இருக்கும் என்று தெரிகிறது. அவர் யார் என்பது குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். காயமடைந்த யமுனா ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x