Published : 17 Oct 2017 09:01 AM
Last Updated : 17 Oct 2017 09:01 AM

மெட்ரோ ரயில்களை கூடுதல் நேரம் இயக்க முடிவு

சென்னையில் தற்போது விமான நிலையம் – ஆலந்தூர்- சின்னமலை, பரங்கிமலை – நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. 20 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டதால், மெட்ரோ ரயில்களில் கடந்த 2 நாள்களாக மாலை நேரங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘தீபாவளியொட்டி மெட்ரோ ரயில்களில் மக்கள் பயணம் செய்வது 20 முதல் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கோயம்பேட்டுக்கு செல்ல மக்கள் அதிகளவில் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துகின்றனர். எனவே, மக்களின் வசதிகாக 16, 17-ம் தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதேபோல், வரும் 19, 20-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் இரவு 10 வரையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x