Published : 25 May 2023 03:48 PM
Last Updated : 25 May 2023 03:48 PM

பங்களிப்பு ஓய்வூதியத் கணக்குத் தாள்கள் நாளை வெளியீடு: தமிழக அரசு

சென்னை: அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத் தாள்கள் நாளை வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் 5,45,297 தமிழக அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2022-2023ம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத்திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு 26.05.2023 அன்று காலை 10 மணிக்கு அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது. அத்துறையின் ‘’cps.tn.gov.in/public’’ என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x