Published : 03 Oct 2017 10:18 AM
Last Updated : 03 Oct 2017 10:18 AM

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் வைகோ சந்திப்பு

தமிழக பொறுப்பு ஆளுநர்வித்யாசாகர் ராவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து மதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தி:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நீண்டநாள் நண்பரும், தமிழக பொறுப்பு ஆளுநருமான வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மகாராஷ்டிர மாநிலம் செல்கிறார். இதனால், அவரை நட்புரீதியாக நேரில் சந்தித்து வைகோ வாழ்த்து தெரிவித்தார்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ், நடுநிலை தவறாமல் நேர்மை யாக பணியாற்றினார். ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர், அவ்வையார் சிலைகளை நிறுவிய பெருமைக்குரியவர். ஆளுநர் மாளிகையை பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதி அளித்த சிறப்பும் அவருக்கு உண்டு என்று வைகோ கூறினார்.

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x