Published : 14 Oct 2017 08:58 AM
Last Updated : 14 Oct 2017 08:58 AM
போலி பாஸ்போர்ட் மூலம் சென்று கம்போடியாவில் தங்கி இருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த தாதா ஸ்ரீதர் கடந்த 4-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரது வழக்கறிஞர்கள் புருஷோத்தமன், மகன் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் கம்போடியாவில் ருந்து அவரது உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
ஸ்ரீதர் உடலை ஒப்படைக்க அவர் இந்தியர் என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி கம்போடிய அரசு கேட்டிருந்தது. அதன்படி இந்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை பரிசீலித்த கம்போடிய அரசு ஸ்ரீதரின் உடலை இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
வழக்கறிஞர் தகவல்
இதுகுறித்து ஸ்ரீதர் தரப்பு வழக்கறிஞர் புருஷோத்தமன் தொலைபேசி மூலம் கூறியதாவது: ஸ்ரீதரின் உடலை இந்தியா எடுத்துச் செல்ல கம்போடிய அரசு அனுமதி வழங்கிவிட்டதால், சனிக்கிழமை இரவு கம்போடியாவில் இருந்து கோலாலம்பூர் வழியாகச் சென்னை வரும் விமானத்தில் உடலை கொண்டு வருகிறோம். ஞாயிற்றுக்கிமை சென்னைக்கு விமானம் வரும் என்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி கூறும்போது, “அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்தவுடன் என்ன நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்வோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT