சென்னையில் பேரணியாக சென்று திமுக ஆட்சி குறித்து ஆளுநரிடம் புகார் மனு அளித்த இபிஎஸ்

ஆளுநரிடம் புகார் மனு அளித்த இபிஎஸ்
ஆளுநரிடம் புகார் மனு அளித்த இபிஎஸ்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் பேரணியாக சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் திமுக ஆட்சி குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமயில் இன்று அதிமுகவினர் பேரணியாக சென்று திமுக ஆட்சி குறித்து ஆளுரிடம் புகார் மனு அளித்தார். உடன் மூத்த தலைவர்கள் தமிழ் மகன் உசேன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி ஆகியார் இருந்தார்.

முன்னதாக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் கிண்டியில் பேரணி நடைபெற்றது. வேளச்சேரி சாலை, சைதாப்பேட்டை, சென்னை மாநகர அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையின் பின்புறம் அனைவரும் குழுமி, அங்கிருந்து சின்னமலை தாலுகா அலுவலக சாலை வழியாக பேரணியாக ஆளுநர் மாளிகை சென்றனர். இந்தப் பேரணியில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் காரணமாக சைதாப்பேட்டை, சின்னமலை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in