ஆவடி காவல் ஆணையராக ஏ.அருண் நியமனம்: தமிழகம் முழுவதும் 23 ஐபிஎஸ் உட்பட39 அதிகாரிகள் இடமாற்றம்

ஆவடி காவல் ஆணையராக ஏ.அருண் நியமனம்: தமிழகம் முழுவதும் 23 ஐபிஎஸ் உட்பட39 அதிகாரிகள் இடமாற்றம்
Updated on
1 min read

சென்னை: ஆவடி காவல் ஆணையராக ஏ.அருண் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கூடுதல் டிஜிபிக்கள், ஏடிஎஸ்பிக்கள் என 9 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 23 ஐபிஎஸ் உள்ளிட்ட 29 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை செயலர் பி.அமுதா வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார்.

கூடுதல் பொறுப்பு: எஸ்பிசிஐடி எஸ்பி-2 ஆக உள்ள எஸ்.சரவணன், ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு எஸ்பி பொறுப்பையம், சென்னை காவல் தலைமையிடத்து கூடுதல் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், சென்னை வடக்கு சட்டம்-ஒழுங்கு கூடுதல் ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in