Published : 22 Oct 2017 12:46 PM
Last Updated : 22 Oct 2017 12:46 PM

என்னை யாரும் மிரட்டவில்லை: பழ. கருப்பையா அறிக்கை

புதுக்கோட்டை காரையூரைச் சேர்ந்த யாருக்கும் நான் கடன் கொடுக்கவும் இல்லை. அந்தக் கடனை கேட்டதற்காக என்னை யாரும் மிரட்டவும் இல்லை என முன்னாள் எம்எல்ஏ பழ. கருப்பையா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ பழ. கருப்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடனை திரும்பத் தர மறுத்து மிரட்டல் விடுக்கும் கணவர், மனைவி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் நான் மனு தாக்கல் செய்திருப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல. நான் திருப்பத்தூர் நவனிக்களத்தை சேர்ந்தவனும் அல்ல, எனக்கு அந்த கிராமத்தில் பத்து ஏக்கர் நிலமும் இல்லை.

புதுக்கோட்டை காரையூர் பகுதியைச் சேர்ந்த யாருக்கும் நான் கடன் கொடுக்கவும் இல்லை. ஆகவே கொடுக்கப்படாத கடனை திரும்பத்தர வேண்டிய வேலையோ, அதை நான் கேட்டேன் என்பதற்காக என்னை கொலை செய்ய வேண்டிய முயற்சியோ தேவையற்ற ஒன்று. எனவே, உயர் நீதிமன்ற கிளையில் நான் மனு தாக்கல் செய்திருப்பதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x