Published : 02 Jul 2014 09:39 AM
Last Updated : 02 Jul 2014 09:39 AM

முறையான விசாரணை நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

கட்டிடம் இடிந்து விழுந்தது பற்றி முறையான விசாரணை நடத்த வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள் ளார்.

சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் இடிந்த இடத்தில் நடக்கும் மீட்புப் பணிகளை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பார்வையிட் டார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

மீட்புப் பணிகள் இன்னும் வேகமாக நடந்தால் நன் றாக இருக்கும். இதை அரசியலுக் காக சொல்லவில்லை. மனிதாபி மானத்தோடு சொல்கிறேன். இடிந்து விழுந்த கட்டிடத்தில் விதிமீறல்கள் நடதுள்ளதாக பல் வேறு செய்திகள் வந்து கொண் டிருக்கின்றன. தமிழக அரசு முறையான விசாரணை நடத்தி அதை தெளிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் உண்மை நிலவரம் மக்களுக்கு தெரியவரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x