சென்னை | கடலில் குளித்த 2 மாணவர்கள் உயிரிழப்பு

ஸ்ரீகாந்த், ஹரிஷ்
ஸ்ரீகாந்த், ஹரிஷ்
Updated on
1 min read

சென்னை: திருவொற்றியூர் தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (20). பொன்னேரியில் உள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்துவந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் (16), 10-ம் வகுப்புமாணவர். இவர்கள் மேலும் 4 நண்பர்களுடன் சேர்ந்து திருவொற்றியூர் தாங்கல், சுதந்திரபுரம் கடற்கரை பரப்பில் நேற்று மதியம் குளித்தனர்.

அப்போது, எழுந்த ராட்சத அலை 7 பேரையும் உள்ளே இழுத்துச் சென்றது. இதில், 3 பேர் தப்பி வெளியே வந்த நிலையில், காந்த், ஹரிஷ் மற்றும் மற்றொரு கல்லூரி மாணவர் சந்துரு ஆகியோர் கடலில் மூழ்கினர்.

உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து 2 மாணவர்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர், அவர்களை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஹரிஷ், காந்த் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸார் வழக்குப் பதிந்து, மாயமான மற்றொரு மாணவர் சந்துருவை தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in