Published : 01 Jul 2014 12:17 PM
Last Updated : 01 Jul 2014 12:17 PM

கட்டிடத் தொழிலாளர்களின் பாதுகாப்பில் அக்கறை தேவை: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வலியுறுத்தல்

போரூர் அருகே 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ரமணா’ திரைப்படத்தில் இதுபோன்ற ஒரு காட்சியை படமாக்கியிருந்தார்.

அந்தக் காட்சி குறித்தும், தற்போது நடந்துள்ள சம்பவம் குறித்தும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியதாவது:

குஜராத் பூகம்பம் ஏற்படுத்திய பாதிப்பில்தான் அந்தக் காட்சியை ‘ரமணா’ படத்தில் வைத்தேன். இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன சமீபத்தில்கூட மும்பையில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. பொதுவாகவே அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும்போது, கட்டுமானப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. 2 அல்லது 3 ஆண்டுகள் கட்டுமானப் பணி நடக்கும் நிலையில், அங்கு வேலை பார்ப்பவர்களின் பாதுகாப்பு குறித்து யாரும் கவனம் செலுத்துவதில்லை. கட்டுமானப் பணியில் ஈடுபடும் பெரும்பாலோர் ஆந்திரா, பிஹார், ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து வயிற்றுப்பிழைப்புக்காக குடும்பத்துடனும் வந்து தங்கி வேலை செய்கின்றனர். அவர்களுக்கு கூலியும் குறைவாகவே அளிக்கப் படுகிறது. வேலை செய்யும் தொழிலா ளர்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்தித் தரவேண்டும். அது பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண் டும். அப்போதுதான் இதுபோன்ற விபத்துகளை குறைக்க முடியும்’’ என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x