Published : 06 Oct 2017 09:17 AM
Last Updated : 06 Oct 2017 09:17 AM

இந்திய சுற்றுலா கண்காட்சி இன்று தொடக்கம்

மதுரா டிராவல்ஸ் நிறுவனம் நடத்தும் 2 நாள் இந்திய சுற்றுலாக் கண்காட்சி சென்னை ஸ்டெல்லா மேரீஸ் பெண்கள் கல்லூரியில் இன்று தொடங்க உள்ளது.

தமிழக சுற்றுலாத் துறை ஆணையர் வி.பழனிகுமார் மற்றும் இந்திய சுற்றுலா நிறுவனத்தின் தென்மண்டல இயக்குநர் ஸ்ரீவத்ஸ் சஞ்சய் ஆகியோர் பங்கேற்று கண்காட்சியைத் தொடங்கி வைக்கின்றனர். மலேசிய சுற்றுலா நிறுவனத்தின் இயக்குநர் நூர் அஸ்மான், மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைவர் விகேடி பாலன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

இந்தக் கண்காட்சியில் தமிழகம், கேரளா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசுத் துறை சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் மலேசியா, தாய்லாந்து, ஓமன் போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனங்களின் அரங்குகள் இடம்பெறும். கல்லூரிகளில் படிக்கும் சுற்றுலாத் துறை மாணவர்கள், ஆசிரியர்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சி இன்றும் நாளையும் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். முதல்நாளில் முன்பதிவு செய்தவர்கள், அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதேசமயம், சுற்றுலாத் துறை அல்லாத பிற துறை மாணவர்கள், பொதுமக்கள் நாளை இலவசமாகக் கண்காட்சியைப் பார்வையிடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x