Published : 06 Sep 2017 11:59 AM
Last Updated : 06 Sep 2017 11:59 AM

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் கட்டாயத்தில் தமிழக அரசு: நீட் விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேட்டி

உச்ச நீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் நீட் நுழைவுத்தேர்வை அமல்படுத்தும் கட்டாயத்திற்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

தமிழக அரசு பெரும்பான்மையுடன் உள்ளது. இந்த ஆட்சி பதவி விலக வேண்டும் என்று நாங்கள் எப்போது பதவி ஏற்றோமோ அப்போது முதல் ஸ்டாலின் கூறி வருகிறார். அதிமுகவுக்கு சபாநாயகருடன் சேர்த்து 135 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதிமுக அறுதி பெரும்பான்மையோடு உள்ளது.

அனைவரும் அதிமுக ஆட்சிக்கு ஆதரவை அளித்து வருகின்றனர். நேற்றைய கூட்டத்துக்கு பல்வேறு காரணங்களினால் சிலர் வரவில்லை.

தமிழகத்தில் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணமும். அதற்காகத்தான் போராடினோம், டெல்லிச்சென்று முயற்சி எடுத்தோம். ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் நீட்டை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தமிழக அரசு தள்ளப்பட்டு விட்டதை அனைவரும் அறிவீர்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x