பழநி கோயிலில் போகர் ஜெயந்தி விழா நடந்தே தீரும்: புலிப்பாணி சுவாமி உறுதி

பழநி கோயிலில் போகர் ஜெயந்தி விழா நடந்தே தீரும்: புலிப்பாணி சுவாமி உறுதி
Updated on
1 min read

பழநி: ஸ்ரீமத் போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் பழநியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: பழநி முருகன் கோயில் மூலவர் சிலையை செய்த போகருக்கு, கோயிலில் விழா நடத்த கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக பழநி கோயில் நிர்வாகம் பாரம்பரிய நடைமுறைகளில் தலையிடுவது வேதனையளிக்கிறது. இதுகுறித்து கோட்டாட்சியரிடம் மனு அளிக்க உள்ளோம். திட்டமிட்டபடி மே 18-ல் போகர் ஜெயந்தி விழா நடக்கும் என்றார்.

பழநி கோயில் நடைமுறையிலும், பாரம்பரிய விழாக்களிலும் இல்லாத வகையில், போகர் ஜெயந்தி என்ற பெயரில் விழா நடத்த முயற்சி நடக்கிறது, அதை நடத்த கூடாது என கோயில் நிர்வாகம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in