மதரீ தியாக பேசி அரசியல் செய்யாமல் அரசுடன் இணக்கமாக போவதே ஆளுநர் கடமை: அமைச்சர் பொன்முடி கருத்து

மதரீ தியாக பேசி அரசியல் செய்யாமல் அரசுடன் இணக்கமாக போவதே ஆளுநர் கடமை: அமைச்சர் பொன்முடி கருத்து
Updated on
1 min read

சென்னை: மாநில அரசுடன் இணக்கமாக போவதுதான் ஆளுநரின் கடமையாகும். அதை விடுத்து அரசியல்செய்யக் கூடாது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை 53 சதவீதமாக அதிகரித்துள்ளது. தரத்தை உயர்த்த ‘நான் முதல்வன்’ திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. உண்மையில் திராவிட ஆட்சியில்தான் உயர்கல்வி வளர்ந்தது. இந்தியாவில் ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழகத்தின் 18 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், சென்னை பல்கலை. 10-ல் இருந்து 100-வது இடத்துக்கு சென்றுவிட்டதாக ஆளுநர் கூறியது தவறான தகவல். சென்னை பல்கலை. உலக அளவில் 547-வது இடத்திலும், தேசிய அளவில் 12-ம் இடத்திலும் உள்ளது. இதுதான் உண்மையான தகவல். அவருக்கு யார் தரவுகளை எடுத்து தந்தார்கள் என்று தெரியவில்லை. இந்த திராவிட மாடல்ஆட்சியின்போதுதான் கல்வித்துறை வளர்ச்சி பெற்றுள்ளது.

ஆளுநர் ஏராளமான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது கூட தமிழகத்தில் கல்வித்தரம் சிறப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இப்போது மாற்றி பேசுவது அரசியலுக்காக என எண்ணத் தோன்றுகிறது. உண்மையான தரவுகளை ஆளுநர்தேடி அறிந்துகொள்ள வேண்டும்.

ஆளுநராக இருப்பவர் அரசியல்பேசுவது தவறு. ஆனால், மாணவர்களை அழைத்துவந்து மதரீதியாகப் பேசி அரசியலை செய்துவருகிறார். மாநில அரசுடன் இணக்கமாகச் செல்வதுதான் ஆளுநரின் கடமை. எனவே, ஆளுநர் அரசியலுக்கு அப்பாற்பட்டு, நிர்வாகத்தை நடத்துபவராக இருக்க வேண்டும்.

திராவிட இயக்கம் வந்தபின் சனாதனம் தமிழகத்தில் காலாவதியாகி விட்டது. ஆளுநர் பதவிதான் தற்போது காலாவதியாக வேண்டிய ஒன்று. திராவிடம் தேசிய அளவில் பரவத் தொடங்கியுள்ளது. மனிதநேயம், சமூகநீதி, மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டதே திராவிடம். யாரையும் எதிர்த்து உருவாக்கப்பட்ட கொள்கையல்ல.

உலகில் உள்ள அனைத்து சமூகஇயக்கங்களுக்கும் வழிகாட்டியாக திராவிட இயக்கம் திகழ்கிறது. திராவிட இயக்கம் பற்றி நான் எழுதியபுத்தகத்தை ஆளுநருக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in