களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கை தான் - ஆளுநருக்கு சு.வெங்கடேசன் பதில் 

ஆர்.என்.ரவி | கோப்புப் படம்
ஆர்.என்.ரவி | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: "களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கை தான்" என்று ஆளுநருக்கு சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார்.

திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி. திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில், "திராவிட மாடல் செத்துப் போன தத்துவம்.” “மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது.” “ பரிணாமக் கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம்” என்று சொல்லும் ஆளுநர் அவர்களே! களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கை தான் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in