Published : 02 Sep 2017 03:30 PM
Last Updated : 02 Sep 2017 03:30 PM
அனிதாவின் மரணம் போல் வேறு உயிரிழப்புகள் நிகழக் கூடாது என்பதே பாஜகவின் குறிக்கோள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்ப்பாடி பழனிசாமியை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன்," மாணவி அனிதாவின் மரணம் வருந்தத்தக்கது. அனிதாவின் மரணம் போல் வேறு உயிரிழப்புகள் நிகழக் கூடாது என்பதே பாஜகவின் குறிக்கோள்” என்றார்.
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
பிளஸ் 2 தேர்வில்1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றிருந்த அனிதா, மருத்துவப் படிப்பில் சேர 196.75 கட் ஆஃப் மதிப்பெண் வைத்திருந்தும், நீட் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் மருத்துவ படிப்புக்கான வாய்ப்பை இழந்தார். நீட் தேர்வில் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே அனிதா எடுத்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT